Wednesday, February 1, 2017

பட்ஜெட் தாக்கல் - மோடியின் அராஜகம்




இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் பற்றி எதுவும் இந்த பதிவில் எழுதப் போவதில்லை. முழுமையாக படித்த பின்புதான் எழுதுவேன்.

ஆனால் இன்று பட்ஜெட் தாக்கல் செய்ததே மோடியின் இன்னொரு அராஜக நடவடிக்கை. நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரான வழக்கமான அயோக்கியத்தனம்.

தற்போதைய உறுப்பினர்கள் யாராவது இறந்து போனால் அவருக்கு அஞ்சலி செலுத்தி நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பது என்பதுதான் காலம்காலமாக பின்பற்றப்பட்டு வருகின்ற மரபு. அதை காலில் போட்டு மிதித்துள்ளார் மோடி.

கேரள மாநிலம் கண்ணூர் தொகுதி மக்களவை உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.அகமது நேற்று அவை நடக்கையிலேயே மாரடைப்பால் மயங்கி விழுகிறார். இன்று காலையில் அவர் இறந்து போனதாக அறிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற மரபுப்படி இன்று அவையை ஒத்தி வைக்க வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் எதிர்ப்பை மீறி அவை நடந்துள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தன் தந்தையை பார்க்க மருத்துவமனை அனுமதிக்கவில்லை என்று அகமதின் மகன் தெரிவித்துள்ளார். இன்றைய பட்ஜெட் தாக்கலில் சர்ச்சை வரக்கூடாது என்பதற்காக தன் தந்தையின் மரணச் செய்தியை வெளியிடாமல் இருக்க அரசு முயன்றதோ என்ற சந்தேகம் வருகிறது என்பதை புறக்கணித்து விட முடியாது.

அப்பல்லோ மர்மங்களை சமீபத்தில் பார்த்தவர்கள்தானே நாம். 

எட்டு முறை எம்.பி யாக இருந்தவருக்கு மோடி தரும் மரியாதை இதுதான். கார்ப்பரேட்டுக்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பதை ஒரு நாள் கழித்து அறிவித்தால் குடியா முழுகி விடும்? அப்படி என்ன அவசரம்?
 
 இதுதான் மோடியின் அராஜகம். எவன் செத்தா எனக்கென்ன என்ற திமிர்.
 

No comments:

Post a Comment