Wednesday, February 22, 2017

ஜக்கிக்கும் மோடிக்கும்தான் பொருத்தம்





ஜக்கி அமைத்துள்ள சிலையை மோடி திறந்து வைப்பதுதான் மிகவும் பொருத்தம்.

ஆமாம்,

இருவருக்கும் அவ்வளவு ஒற்றுமை உண்டு,

தனது ஆஸ்ரமத்திற்கு வரும் பக்தர்களை போதையின் பிடியில் வைத்துள்ளதாய் ஜக்கி மீது புகார்கள் உண்டு. பொய்யான வாக்குறுதி கொடுத்து வாக்காளர்களை போதை மயக்கத்திற்கு எடுத்துப் போனவர் மோடி.

நாடாளுமன்ற மரபுகளை காலில் போட்டு மிதித்து பல சட்டங்களை நிறைவேற்றியவர். மோடி. அனைத்து விதிகளையும் காலில் போட்டு மிதித்து ஆஸ்ரமம் கட்டியவர் ஜக்கி.

பேச்சின் மூலம் மக்களை ஏமாற்றுவதில் இருவருமே கில்லாடிகள்.

எதற்கும் உதவாத பிரம்மாண்ட சிலைகளை மும்பையிலும் குஜராத்தில் அமைத்துக் கொண்டிருப்பவர் மோடி. அதை வெள்ளியங்கிரியில் செய்தவர் ஜக்கி.

எத்தனை கடுமையான விமர்சனம் இருந்தாலும் அவற்றை துடைத்துப் போட்டு வெட்கமே இல்லாமல் இருப்பதில் மோடியும் ஜக்கியும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல.

ஜக்கியின் மனைவியின் மரணம் மர்மமானது என்று அந்த பெண்ணின் பெற்றோர் கண்ணீர் விட்டார்கள். மோடியோ மனைவி இருப்பதையே மறைத்தவர்.

கார்பரேட்டுகளுக்கு சேவை செய்பவர் மோடி. கார்ப்பரேட்டுகளால் சேவை செய்யப்பட்டு கார்ப்பரேட்டாக மாறியவர் ஜக்கி.

மோடியை யாராவது திட்டுகையில் பதில் அளிக்க முடியாமல் இதை காங்கிரஸ் செய்யவில்லையா என்று ஜால்ராக்கள் கேட்பார்கள். ஜக்கியின் ஜால்ராக்கள் காருண்யா செய்யவில்லையா என்று கேட்பார்கள்,

மோடி ஸ்வச்ச பாரத் என்று புரியாத ஹிந்தியில் சொன்னால் ஜக்கி ஆதியோகி என்று புரியாத தமிழில் சொல்வார்.

கமலஹாசனை விட அதிகமாக ஆடைகளில் கவனம் செலுத்துபவர்களும் விதம் விதமாக போட்டோவிற்கு போஸ் கொடுப்பவர்கள் இந்த இருவர்களைத் தவிர வேறு யார் உள்ளார்கள்?

தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றுவதிலும் அதீத மோகம் கொண்டவர்கள் இருவருமேதான். 

மொத்தத்தில் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பறிப்பவர் மோடி.
இயற்கை வளங்களை பறிப்பவர் ஜக்கி.

இந்த கூட்டணி அடிப்படையில் மக்களுக்கு எதிரான, நாட்டு மக்களுக்கு எதிரான கிரிமினல் கூட்டணி.

பின் குறிப்பு : ஜக்கி பற்றிய இன்னும் இரண்டு முக்கிய பதிவுகளை நாளை பகிர்ந்து கொள்கிறேன்
 


    

3 comments:

  1. என்ன இது? ஏன் திரு மோடி என்றால் மட்டும் இப்படி ஒரு கொடூரம். இது புடிக்கலையை.. தாராளமா நாட்டை விட்டு வெளியேறுங்கள். தேசவிரோதமா இப்படிலாம் எழுதாதீர்கள். தேச விரோதிகள் நீங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Typical response of a Sanghi. Let the criminal quit his PM post. You are making the country and people miserable. How long you will remain a fool by supporting Modi?

      Delete
  2. தேச நேசன் எனும் பெயரில் பின்னூட்டம் இட்டிருக்கும் தினமலம் ட்டீம் மெம்பருக்கு,
    உண்மையை எழுதினால் நாட்டை விட்டு வெளியேறச் சொல்வதற்கு நீ யார்? இந்திய நாடு ஒங்கம்மா சீதனமா கொண்டு வந்ததா?

    ReplyDelete