Friday, February 3, 2017

நான்கு லட்ச ரூபாய் ஏமாற்றம்



தன் வாழ்க்கையில் இப்படி ஒரு பட்ஜெட் பார்த்தது கிடையாது என்று தமிழிசை சொல்கிறார்களே, அப்படி என்ன உள்ளது என்று  முழுமையாக படித்து பார்த்தேன். ஆனால் அருண் ஜெய்ட்லி  என்னை ஏமாற்றவில்லை. நான் எதிர்பார்த்தது போலவே உருப்படியாக எதுவும் இல்லை.

ஆனால் பல நடுத்தர மக்கள் வருமான வரி வரம்பில் மாற்றம் வரும் என்று நம்பி ஏமாந்தார்கள். பட்ஜெட்டிற்கு சில நாட்கள் முன்பாக வாட்ஸப்பில் ஒரு வதந்தி பரவியது. Central Board of Direct Taxes வழங்கிய தகவல் என்று அது சொன்னது.

நான்கு லட்ச ரூபாய் வரை வருமான வரி கிடையாது. 20 % ஸ்லாபெல்லாம் பத்து சதவிகிதமாக குறைந்து விட்டது. சேமிப்புக்கான வரம்பு இரண்டரை லட்சம் என்று ஏராளமாய் மோடி அள்ளிக் கொடுக்க முடிவு செய்து விட்டார் என்று வந்த வதந்தியை நம்பி பாவம் பலர் சுற்றுக்கெல்லாம் விட்டார்கள். 

படிக்காதவன் படத்தில் மக்கள் விவேக்கை டான் டான் என்று உற்சாகமாக கொண்டாடும்போது அவரது அல்லக்கைகள் "உங்களை இவ்வளவு பேர் நம்பறாங்களே, இவங்களுக்கு என்ன செய்யப் போறீங்க" என்று கேட்பார்கள். உங்களுக்கு நான் என்ன செஞ்சிருக்கேன் என்று விவேக் கேட்க "ஒன்னும் செய்யல" என்று வெறுப்போடு பதில் சொல்வார்கள். "அதுதான் இவங்களுக்கும்" என்று விவேக் சொல்வார்.

அது போன்ற அரசுதான் மோடி அரசு என்பதை இரண்டரை ஆண்டு அலங்கோல ஆட்சியைக் கண்டும் புத்தி வராமல் நம்பி ஏமாந்த அதி மேதாவி நடுத்தர மக்களைப் பார்த்து எனக்கு பரிதாபம் வரவில்லை. பட்ஜெட் அன்று காலையில் நம்பிக்கையோடு காத்திருந்த முகங்கள் மதியம் வாடிப் போனதை பார்க்கையில் சிரிப்புதான் வந்தது.

இத்தனை அடிபட்டும் திருந்தாவர்களை என்னவென்று அழைப்பது?

 
   

2 comments:

  1. This GOVT not for Normal (middle/poor) class people. only for upper class.unfortunately there is no option to change.....like a hell....

    ReplyDelete