Saturday, February 25, 2017

ஜக்கி கூத்து - ஒரு பக்தரின் பார்வையில்

திரு வினைதீர்த்தான் - ஓய்வு பெற்ற எல்.ஐ.சி அதிகாரி. அவர் தொழிற்சங்க தலைவரோ, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரோ கிடையாது. சொல்லப் போனால் சிவாலயங்களை தேடித் தேடி பார்த்து அக்கோயில்களின் சிறப்புக்களை முக நூலில் பகிர்ந்து கொள்கிற ஒரு பக்தர். 

ஆதியோகி கூத்து பற்றி முக நூலில் அவர் பகிர்ந்து கொண்ட அர்த்தமிக்க, ஆழமான பதிவை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

மீண்டும் சொல்கிறேன். அவர் ஒரு பக்தர். இடதுசாரி அல்ல. 






நேற்றிரவு ஆதியோகியின் முகம் சிலை திறப்புவிழாவை தொலைக்காட்சியில் கண்டேன்.பிரதமர் மோதியின் ஆங்கிலமும் தெளிவும் கவர்ந்தன. குரு ஜக்கி வாசுதேவின் ஆட்டத்தையும் உயர்ந்தபட்ச ஓசையில் பக்தர்கள் ஆண், பெண்களின் ஆட்டமும் பார்த்தேன்.

ஜக்கியிடம் கேட்கப்பட்ட ”சிவனின் தலையில் ஏன் சந்திரன் இருக்கிறது” என்ற ஒரு கேள்விக்கு அவர் சோமனாகிய சந்திரன் (சோமரசம்) ‘இண்டாக்சியேசன்’ குறியீடு என்று விளக்கமளித்தார். சிவன் சதா இண்டாக்சியேசனில் இருக்கிறார். ஆனால் முழுவிழிப்போடு இருக்கிறார் என்று சொன்னார். சந்திரன் குறியீடுக்கு இது சரியான விளக்கமா? 

ஆதியோகிக்கே இந்த மாதிரி கதைகட்டினால் அவருடைய பக்தர்கள் சிவன்நிலையை அடைய கெமிக்கல் போதையில் ஆரம்பித்து கொஞ்சம்கொஞ்சமாக கெமிக்கல் போதையின் உதவி இல்லாமலேயே சதா ஆனந்தநிலையை அடையலாமென்று உபாயம் சொல்லிக்கொடுப்பார்கள் போல உள்ளது. 

1.ஈஷா யோகமையத்தில் பக்தர்கள் ஆடிய ஆட்டத்தைக் கண்டபோது, ஒரு படித்தவர் போலிருந்த பெண் மயங்கி விழுந்ததைக் கண்டபோது போதைவஸ்து குறித்த ஐயமே எழுகிறது.

ஈசன் சந்திர பிறையணிந்துள்ளதற்கு சோமரசம் பருகிய இண்டாக்சியேசன் ஆனால் முழுவிழிப்புணர்வின் குறியீடு என்பது சரியான விளக்கமா?


2.குரு பளபளக்கும் ஆடையணிந்துள்ளார். உயர்ந்த காலணி அணிந்துள்ளார். ஒருவகையில் அழகுபடுத்திய தாடி, முடி வளர்த்துள்ளார். ஆனால் சீடர்கள் மொட்டையடித்து, காவிகட்டி,மெல்லிய தேகத்துடன் அடிமைகள் போல காணப்படுகிறார்கள். குருவுக்கு ஒரு நீதி. மூளைச்சலவைசெய்யப்பட்ட அடிமைகளுக்கு ஒரு நீதியா?


3. மையத்திற்கு ஒரு முறை சென்றிருந்தபோது கிரானைட் கற்களால் இழைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். மதுரையச்சுற்றிய மலைகளெல்லாம் பிளக்கப்பட்டு பாளங்களாக ஈஷா மையத்தை அடைந்துவிட்டதோ என்று வியந்தேன், ஆயிரக்கணக்கில் Block களாக கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அங்கு சென்றுள்ள நண்பர்கள் பார்த்திருப்பீர்கள். அவை எங்கிருந்து, எவ்வாறு வந்தன என்று கண்டறிய விசாரணைக்கமிஷன் போடவெண்டும்.


சுற்றுச்ச்சூழல் கேடுவிளைத்தல் குறித்த விசாரணைகமிஷனோடு இதனையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.


என்னை உறுத்திய மேற்கண்ட மூன்று விஷயத்தோடு பிறவற்றைக் குறித்தும் நண்பர்கள் எழுதுங்கள்.நன்றி..

அவர் மேலும் எழுதியிருந்ததையும் இங்கே பதிவிட்டுள்ளேன்


நேற்றிரவு முதலில் காரைக்குடி நகரச்சிவன் கோவிலுக்குச் சென்றோம். வழிபாட்டுக்கு ஒரு பக்கம் கூட்டம் முட்டி மோதிக்கொண்டு இருந்தது. ஒருபக்கம் திருநாவுக்கரசர் நற்பணிமன்றத்தார் எந்தவித ஆரவாரமுமில்லாமல் திருவாசகம் முற்றோதல் செய்து கொண்டிருந்தனர். அரைமணி நேரம் நின்று உருகிக்கேட்டு வந்தோம். திருநெறிய தெய்வத்தமிழ் தேர்ந்தால் ஜக்கி சொல்கிற ONENESS தானே வந்து சேரும். விக்கிரகத்தைக்கூட கூட்ட நெரிசலில் தரிசிக்க வேண்டியதில்லை.

3 comments:

  1. Jaggi show was a clear show-off to tamilnadu public that he is above the local laws. He again proved his higher political connections and ensured his insulation from local people.

    ReplyDelete
  2. வாங்குபவர்கள் இருந்தால் மனித சாணமும் விலை போகும். அங்கு எவ்வளவு பேர் கூடியிருந்தார்கள், பார்த்தீர்களா?

    ReplyDelete
  3. In the name of Bakthi our people will go to any extend to show their faith in it, irrespective of the genuineness of the person who preaches Bakthi. Bakthi should be in our Mind and Behaviour, not in show business. Recently I went to some Shiva temples which were built some thousand years ago. Those temples are waiting for Bakthas to visit and it give a pathetic look. But I went to one temple, where the entry was very costly, the distance to move to the Sanctum Sanctorum was tedious and unnecessary going around. These are all gimmicks, there is no Bakthi there, but only show business. But who will enlighten our people?

    ReplyDelete