Monday, February 23, 2015

பணத்திற்காக வெறியூட்டாதீர்கள்


Image result for Star sports cricket advertisement

 Image result for Star sports cricket advertisement


 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சேனல் தயாரித்த மூன்று விளம்பரப் படங்களை நேற்று என் மகன் காண்பித்தான்.

பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் பாகிஸ்தானின் வெற்றி பெற்றால் வெடிப்பதற்காக பட்டாசுகளை வாங்கி பல வருடங்களாக ஏக்கத்துடன் காத்திருந்து ஏமாறுவதாக முதல் படம் இருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவை இதுவரை உலகக் கோப்பையில் வென்றதே இல்லை என்பதை தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் நையாண்டி செய்வதாக இரண்டாவது விளம்பரப்படம் இருக்கிறது.

ஏமாற்றத்துடன் உள்ள பாகிஸ்தான் ரசிகர் தென் ஆப்பிரிக்க சட்டையைப் போட்டுக் கொண்டு அந்த அணியை ஆதரிப்பதாகவும் அந்த அணி தோற்றதும் வெறுப்பாக அந்த சட்டையை கழட்டி வீசி வெளியே வருபவரிடம் ஐக்கிய அரபு அணி ரசிகர் தங்கள் சட்டையை பாகிஸ்தான் ரசிகரிடம் அளித்து தங்களை ஆதரிக்கச் சொல்வதாய் மூன்றாவது விளம்பரம் அமைந்துள்ளது.

இந்த விளம்பரங்கள் எல்லாமே இந்திய ரசிகர்களை வெறியூட்டும் தன்மையோடுதான் அமைந்துள்ளது. இது மலிவான ரசனை என்பது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. இந்தியா பாகிஸ்தான் மக்களிடையே பகைமையை உருவாக்குவதும் அதை அதிகப்படுத்துவதுமாக உள்ளது. கனவான்களின் விளையாட்டு என்று சொல்லப்பட்ட கிரிக்கெட் களவாணிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளது என்பதற்கான உதாரணம் இது.

தங்களுடைய விளம்பர வருவாயை அதிகரிக்க, அதிகமானவர்களை தொலைக்காட்சியை பார்க்க வைக்க இப்படி வெறியூட்டப்படுகிறது. பன்னாட்டு ஊடகங்கள் கிரிக்கெட் உலகில் அடிவைத்த பின்புதான் எல்லா சீர்கேடுகளும் தொடங்கியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இப்போது அந்த சீரழிவு காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அளவிற்கு போய் விட்டது. பொதுவாக இங்கிலாந்து கால்பந்து ரசிகர்களை முரட்டுத்தனமானவர்கள் என்று எல்லோரும் சொல்வார்கள். அப்படி முரட்டுத்தனமான கிரிக்கெட் ரசிகர்களை உருவாக்கவே இது போன்ற மட்டமான சிந்தனை கொண்ட விளம்பரங்கள் வழி வகுக்கும்.

ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால் 

This is not Cricket
 

3 comments:

  1. கிரிக்கெட் விளையாட்டு என்ற நிலையில் இருந்து வணிக நோக்கில் பயணிக்கத் தொடங்கி விட்டது நண்பரே.

    ReplyDelete
  2. vara vara CRIKET-UM
    communism- maadhiri
    aaayitu! sarey!

    ReplyDelete
    Replies
    1. அனானி என்றால் அபத்தம் என்று அர்த்தம் போல. மட்டமான சிந்தனையின் வெளிப்பாடு திருவாளர் கோழை அவர்களே

      Delete