Monday, January 5, 2015

அவர்கள் எங்கே தொலைந்து போனார்கள்?

 http://vadakkus.com/wp-content/uploads/2014/05/Manmohan-Singh-and-Narendra-Modi1.jpg

இன்று போல்
அன்றும் ஒரு
மக்கள் விரோத ஆட்சி.

தேசத்தை விலை பேசினார்கள்,
மக்களை வாட்டி வதைத்தார்கள்,
ஜனநாயகத்தை மீண்டும் மீண்டும்
படுகொலை செய்தார்கள்.
அவசரச் சட்டத்தின் மூலமே
ஆட்சி நடத்தினார்கள்.

அன்றும் நான்
அவர்களை எதிர்த்தேன்
ஆக்ரோஷமாய் எழுதிக் குவித்தேன்.

ஆமாம் என்று
ஆத்திரப்பட்டார்கள்.
அனுமதிக்கக் கூடாதென
ஆதரவாய் குரல் கொடுத்தார்கள்.

நேற்று போலவே
இன்றும் ஒரு ஆட்சி
தேசத்தை விலை பேசுகிறது,
மக்களை வாட்டி வதைக்கிறது,
ஜனநாயகத்தை மீண்டும் மீண்டும்
படுகொலை செய்து கொண்டே இருக்கிறது.
அவசரச் சட்டம் மூலமாய்
ஆட்சி நடத்துகிறது.

இன்றும் நான் எதிர்க்கிறேன்,
ஆக்ரோஷமாய் எழுதிக் குவிக்கிறேன்.

அன்றைக்கு ஆதரித்து
ஆத்திரமாய் குரல் கொடுத்த
அந்த ஆவேச மனிதர்களைத்தான்
இன்றைக்கு காணவில்லை.
எங்கே போனார்கள் 
என்பதும்  தெரியவில்லை.

ஆட்சி மாறினாலும்
காட்சி மாறாததால்
பாவம் அவர்கள்தான்
தங்களை தாங்களே
கடிந்து கொள்ள முடியாமல்
மறைந்தே போய்விட்டார்கள்.
மனசாட்சியின் உறுத்தலோ?


1 comment:

  1. ///மனசாட்சியின் உறுத்தலோ?///
    இருக்கலாம் நண்பரே

    ReplyDelete