Wednesday, January 7, 2015

நாலு புள்ளைங்கள வளர்க்க துட்டு மோடி மவராசா தருவாரா?





இவங்க ஆட்டம் தாங்கவே முடியலையே. வேற எல்லா வேலையையும் ஏறக்கட்டிட்டு இவங்க பண்ற அராஜகத்தை மட்டுமே எழுதினாலும் நேரம் போதாது போலிருக்கே.

முஸ்லீம் எல்லாம் நாலு கல்யாணம் செஞ்சு நாற்பது புள்ளைங்கள பெத்துக்கிறாங்களாம். அதனால ஹிந்து ஜனத்தொகையை உசத்த ஒவ்வொரு பெண்ணும் நாலு குழந்தைகளை பெத்துக்கனுமாம்.

இதைச் சொன்னவரு சாக்சி மகராசு னு ஒரு நாடாளுமன்ற உறுப்பினராம். யப்பா, உங்க பிரதமர முதல்ல ஒரு பிள்ளையாவது பெத்துக்க சொல்லுன்னு ஒருத்தரு எழுதியிருந்தாரு. அந்த கதையெல்லாம் நமக்கு வாணாம்.

நாலு புள்ளை பெத்துக்கிட்டா பிரசவ செலவு, ஸ்கூல்ல எல்.கே.ஜி தொடங்கி பன்னண்டாவது வரைக்கும் கான்வெண்டுங்க அடிக்கிற கொள்ளை, புத்தக மூட்டை, ஆட்டோ இல்லை பஸ் செலவு, நடுவுல உடம்பு சரியில்லைனா டாக்டர் செலவு, காலேஜ் பீசு, கேபிடேஷன் பீசு, ஹாஸ்டல் பீசு, மண்டை மண்டையா புக்கு வாங்கிற காசு, படிச்சு முடிச்சப்பறம் வேலை, வேலை வாங்க லஞ்சம், அதுக்கப்பறமா கல்யாண செலவு, இதுவே பொட்டப் புள்ளையா இருந்தா வரதட்சணை, நகை நட்டு சீரு, டூ வீலரு, அதுக்கப்பறமா தலை தீபாவளி, தலைப் பொங்கல், சீரு, அதுக்கு பிரசவ செலவு.

இது எல்லாத்துக்கும் துட்டு அந்த சாக்சி மகராசா கொடுப்பாரா?
அவருகிட்ட துட்டு இல்லைனா அருண் ஜெட்லி கிட்ட வாங்கிக் கொடுப்பாரா? இல்லை மோடி மவராசா கொடுப்பாரா?

துட்டு கொடுப்போம்னு சொன்னா மட்டும் பத்தாது ஸ்டாம்ப் பேப்பர்ல எழுதிக் கொடுக்கனும். மாசாமாசம் ஜீரோ பாலன்சுல ஆரம்பிச்ச ஜன் தன் அக்கவுண்டல பணம் போடனும்.

இதெல்லாம் செய்றேனு ஒத்துக்கிட்டா நாலு புள்ளைங்கள பெத்துக்கலாமானு யோசியுங்க.

No comments:

Post a Comment