Saturday, January 31, 2015

யார் அந்த பொருந்தா மனிதர்?





மேலேயுள்ள படத்தை பலரும் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். இந்தியாவின் பெரு முதலாளிகளெல்லாம் பேரரசன் ஒபாமாவின் தரிசனம் காண்பதற்காக பவ்யமாக கால் கடுக்க காத்திருக்கும் காட்சி அது. தங்களின் ஆதாயத்திற்காக எப்படிப்பட்ட அவமானத்தையும் சகித்துக் கொள்ள அவர்கள் தயாராக உள்ளார்கள். தேவைப்பட்டால் ஒபாமாவிற்கோ இல்லை மோடிக்கோ கால் பிடித்து விடக் கூட தயங்காதவர்கள் இவர்கள்.

மோடி அளவிற்கு ஒன்பது லட்ச ரூபாய் ஆடை அணியாவிட்டாலும் கோட், சூட் அணிந்து கச்சிதமாய் சவரம் செய்து, தலைக்கு சாயம் பூசி ஏதோ ஒரு திரைப்பட படப்பிடிப்பிற்கான ஏற்பாடு போன்ற ஒப்பனையோடு இருக்கிற இந்த கனவான்கள் (!) மத்தியில் கொஞ்சமும் பொருந்தாமல் நரைத்த தாடி மீசையோடு பைஜாமா ஜிப்பாவோடு (வட்டத்திற்குள்) நிற்கிற அந்த மனிதர் யார் என்று தெரிந்தால் சொல்லுங்களேன்.

No comments:

Post a Comment