Sunday, January 18, 2015

ஆவணங்களை அழிக்காத போலீஸ் அதிகாரி

 
பாஜக வில் சற்று தாமதமாக, ஆனால் சரியாக டெல்லி மாநிலத் தேர்தல் சமயத்தில் ஐக்கியமாகியுள்ள முன்னாள் காவல்துறை அதிகாரி கிரண் பேடி பாஜக செல்லும் அவசரத்தில் அவர் முன்பு பாஜகவிற்கு எதிராக ட்விட்டரில் பதிவு செய்த கருத்துக்களை அழிக்க மறந்து விட்டார். ஆவணங்களை அழிப்பதிலும் போலியாக உருவாக்குவதிலும் நிபுணத்துவம் பெற்ற ஒரு துறையில் பணியாற்றி அதனை எப்படி மறந்தார் என்று தெரியவில்லை.

ஆம் ஆத்மி கட்சி அவர் முன்பு பதிவு செய்தவற்றை ஞாபகமாக எடுத்து இப்போது வெளியிட்டு வருகின்றார்கள். அவைகளை நீங்களும் கொஞ்சம் பாருங்கள். கடைசியில் இது தொடர்பான எனது விமர்சனத்தையும் அவசியம் பாருங்கள்.












ஆனால் அதைப் பற்றியெல்லாம் அம்மையார் கவலைப்படவில்லை. பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கும் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் "அதெல்லாம் ஊடகங்கள் சொன்னதை வைத்து எழுதியது" என்று பழியை அவருக்கு புகழ் வெளிச்சம் கொடுத்த ஊடகங்கள் மீதே போட்டு விட்டார்.

"அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"  என்று சிலர் கவுண்டமணி வசனத்தை உதாரணம் சொல்கிறார்கள்.

எனக்கென்னவோ ஒரு வடிவேல் வசனம்தான் பொருத்தமாக படுகிறது.

"அது வேற வாயி. இது.................... "

1 comment:

  1. அரசியலில் இதெலலாம் சாதாரணமானதுதான்

    ReplyDelete