Tuesday, September 9, 2014

நறுமணத்தோடு நல்ல செய்தியும் தந்த மலர்கள்



வாசத்தோடு செய்தியும் சொல்லும் மலர்கள்

இன்சூரன்ஸ் வார விழாவை ஒட்டி ஊழியர்களுக்கு மலர் அலங்கரிப்பு போட்டி கடந்த வாரம் நடந்தது.

பரிசு பெற்ற மூன்று மலர் அலங்காரங்களை இங்கே அளித்துள்ளேன்.

பார்க்க மிகவும் அழகாக கலை ரசனையோடு அலங்கரித்துள்ளனர் என்பதும் அந்த மலர்களின் மணம் கொஞ்சம் மயங்க வைத்தது என்பதையும் தாண்டி இந்த அழகிய வடிவங்கள் சொல்லும் செய்தி எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியம்.

கடந்த ஓராண்டில் மட்டும் எல்.ஐ.சி தனது நிகரற்ற சேவைக்காக குவித்த விருதுகள் குறித்த பெருமிதத்தை முதல் பரிசு பெற்ற முதல் படம் சொல்கிறது.


எல்.ஐ.சி யில் செய்யும் முதலீடே பாதுகாப்பானது, தனியார் நிறுவனங்கள் கண்ணாடி பாத்திரங்கள் போல தகர்ந்து போய் விடும் என்பதை இரண்டாவது பரிசு பெற்ற இரண்டாவது படம் சொல்கிறது. 

 ஐம்பத்தி எட்டு வருட வெற்றிப்பயணத்தினை பெருமிதத்தோடு சொல்கிறது மூன்றாவது பரிசு பெற்ற மூன்றாவது படம்.



நிறுவனத்தை நேசிக்கும் ஊழியர்கள்தான் எல்.ஐ.சி யின் பலம். இந்த மலர் அலங்காரங்களும் சொல்வது அதைத்தான். அர்ப்பணிப்புணர்வு உள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்கள்தான் எல்.ஐ.சி யை இத்தனை காலமாக பாதுகாத்து வளர்த்து வந்துள்ளனர். இனியும் இப்பணி தொடரும்.

8 comments:

  1. மலர்களின் அலங்காரம் அழகோ அழகு
    எல்.ஐ.சி இன் பணி தொடரட்டும்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  2. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பர் ஜெயகுமார் அவர்களே

    ReplyDelete
  3. நிறுவனத்தை நேசிக்கும் ஊழியர்கள்தான் எல்.ஐ.சி யின் பலம்.// Will they ever like customers? Never I can say. When people had no option and when there was no competition these so called LIC people ruined common man's life in the name of insurance. now its gone. lets wait and see who is going to acquire this lazy insurance corp

    ReplyDelete
  4. Sorry Mr Ezhil, You are totally ignorant and i condemn your absurd comment. It is the LIC which always protect the lives of common people. Even the foes of LIC can not dispute the services of our employees.

    ReplyDelete
  5. Mr Ezhil, Yu also refer the previous posts and find out who is lazy and who is smart. We will never allow LIC to go into anyone's hand

    ReplyDelete
  6. அதி தீவிரவாதம் பேசுபவர்கள் முதலாளிகளுக்கு ஆதரவாக நிற்பவர்கள் என்பதை நிரூபித்ததற்கு மிகவும் நன்றி

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. அதி தீவிரவாதம் பேசுபவர்கள் முதலாளிகளுக்கு ஆதரவாக நிற்பவர்கள் என்பதை நிரூபித்ததற்கு மிகவும் நன்றி// I am not responsible for your prejudice

    ReplyDelete