Sunday, September 7, 2014

வி.கே.சிங்கை ஜனாதிபதி பணி நீக்கம் செய்ய வேண்டும்

 http://images.jagran.com/pranab_sl_31-03-2012.jpg
சர்ச்சைக்குரிய மத்திய மந்திரியும்  வயதை மாற்றி கூடுதலாக ஒரு வருடம்  பணி நீட்டிப்பிற்காக முயற்சி செய்த முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங்கை ராணுவ தீர்ப்பாணையம்  கடுமையாக கண்டித்துள்ளது.

சுயநலம் காரணமாகவும் தனக்கு பிடிக்காதவர்  ராணுவ தளபதியாக வரக்கூடாது என்பதற்காகவும்  அவர் மீது பொய்க்குற்றம் சுமத்தி  துறைவாரி நடவடிக்கை  எடுத்தார், அது வெறும் பழிவாங்கும்  நடவடிக்கை என்று ஏற்கனவே  வி.கே.சிங் பற்றி  ராணுவ அமைச்சகமே  பிரமாண வாக்குமூலம் சமர்ப்பித்துள்ளது. அது அவர் மோடியின் அமைச்சராக பதவியேற்ற பின்பு அருண் ஜெய்ட்லியின் அமைச்சகம் தாக்கல் செய்ததுதான்.

இப்போது இன்னொரு உயர் அதிகாரி மீதும் பழிவாங்குதல் நடவடிக்கையை வி.கே.சிங்  செய்துள்ளார் என்று ராணுவ தீர்ப்பாணையம்  கண்டித்துள்ளது. 

வெட்கம், மானம் உள்ளவராக இருந்தால் அவர் முதல் சம்பவத்தின் போதே ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் எந்த நெறிமுறையையும் மோடியிடமோ  அவரது சகாக்களிடமோ எப்போதுமோ எதிர்பார்க்க முடியாதே!

இப்போதும்  தனது தவறை ஒப்புக் கொள்ளாமல் ராணுவ தீர்ப்பாணையத்தின் மீதுதான் வி.கே.சிங் பாய்ந்துள்ளார். இப்போதும் அவரை பதவியிலிருந்து நீக்க மோடி முன்வரப் போவதில்லை. 

அதனால்  தவறுக்கு மேல் தவறு செய்துள்ள வி.கே.சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டிய பொறுப்பு  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடையது. குறைந்தபட்ச நேர்மையையாவது உறுதிபடுத்த அவர் செயல்பட வேண்டிய தருணம் இது. 

No comments:

Post a Comment