Sunday, September 21, 2014

தம்பி பிலாவல், வாயை மூடிக்கிட்டு போறயா?

 http://ppppunjab.files.wordpress.com/2014/07/svbilawal_narrowweb__300x4810.jpg

பச்சிளம் பாலகனாய் இருந்து கொண்டு இப்படி பாம்பைப் போல விஷம் கக்கலாமா தம்பி பிலாவல்?

காஷ்மீர் எப்படி இந்தியாவோடு இணைந்தது, மிச்சமுள்ள காஷ்மீர் எப்படி பாகிஸ்தானோடு இருக்கிறது என்ற விபரமெல்லாம் தெரியுமா தம்பி?

காஷ்மீரின் விடுதலைக்கு போராடுபவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட காஷ்மீர் சுதந்திர நாடாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்களே தவிர பாகிஸ்தானோடு இணைய வேண்டும் என்று எப்போதுமே சொன்னதில்லையே. தெரியுமா தம்பி?

காஷ்மீர் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சேதமடைந்து மக்கள் கண்ணீர் வடிக்கும் நேரத்தில் இப்படியெல்லாம் டயலாக் விடக்கூடாது என்று உனது அப்பா பத்து பர்ஸென்ட் ஜர்தாரி சொல்லித்தரவில்லையா தம்பி?

பாகிஸ்தானின் மக்கள் தலைவராக உனது தாத்தா பூட்டோ இருந்தார். அவர் தூக்கிலப்பட்ட அனுதாபத்தில் உனது அம்மா பெனாசிர் பூட்டோ பிரதமரானார். அவர்  கொல்லப்பட்ட அனுதாபத்தில் உனது அப்பா ஜர்தாரி ஜனாதிபதியானார். ஆனால் உங்கள் குடும்பம் அடித்த கொள்ளையால் மக்கள் வெறுப்படைந்து விட்டார்கள். 

அதற்காக இப்படி ஒரு நாடகமா தம்பி?

ஏற்கனவே ஈரை பேனாக்கி பேனை பெருமாளாக்கும் ஆட்சி ஒன்று இங்க இருக்கு. வெறும் வாயையே பிரியாணி சாப்பிடுவது போல மெல்லும் அவர்களுக்கு நிஜமாகவே பிளேட் பிளேட்டா பிரியாணி கொடுத்திட்டியே தம்பி! உனக்கென்ன நீ பாகிஸ்தானில சேபா இருந்துடுவ, நீ பேசின பேச்சுக்கு இந்தியாவில உள்ள முஸ்லீம்களைத்தான இவங்க தாக்க ஆரம்பிப்பாங்க?

கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு போப்பா பிலாவல். 

காஷ்மீரை ஒரு அங்குலம் விடாம மீட்கறதுக்கு முன்னாடி உங்கப்பா கொள்ளையடிச்ச காசுல ஒரு பைசா பாக்கி இல்லாம பாகிஸ்தான் கஜானாவுல சேத்துடு பார்ப்போம்.
 

5 comments:

  1. கண்டனத்திற்கு உரிய பேச்சு

    ReplyDelete
    Replies
    1. எந்த பேச்சு ஜெயக்குமார் அண்ணே. பிலாவல் பேசினதா ? இல்லை இந்த பதிவர் சம்பந்தமில்லாமல்
      "ஏற்கனவே ஈரை பேனாக்கி பேனை பெருமாளாக்கும் ஆட்சி ஒன்று இங்க இருக்கு. வெறும் வாயையே பிரியாணி சாப்பிடுவது போல மெல்லும் அவர்களுக்கு நிஜமாகவே பிளேட் பிளேட்டா பிரியாணி கொடுத்திட்டியே தம்பி! உனக்கென்ன நீ பாகிஸ்தானில சேபா இருந்துடுவ, நீ பேசின பேச்சுக்கு இந்தியாவில உள்ள முஸ்லீம்களைத்தான இவங்க தாக்க ஆரம்பிப்பாங்க?"
      இப்படி எழுதினதா ?

      Delete
    2. நிச்சயமாக, பிலாவல் பேச்சு ஏற்புடையது அல்ல.

      Delete
  2. யப்பா யப்பா யப்பா, உலக மகா நடிப்புடா அனானி. அது எப்படி யோக்கியன் மாதிரியே பேசறீங்க? கலவ்ரங்கள் தொடர்ந்தால் எங்கள் வெற்றி தொடரும் என்றும் அமித் ஷா பேசியதையும் முசாபர்நகரில் திருட்டு விசிடி தயாரித்து சுற்றுக்கு விட்டு கலவரத்தீயை கொழுந்து விட்டு எரியச் செய்ததும் தொடர்ந்து பாஜக ஆட்கள் வெறியூட்டும் விதத்தில் பேசுவதும் சம்பந்தமில்லாத செயல்களா அனானி? உண்மையைச் சொன்னா உங்களுக்கெல்லாம் பத்திக்கிட்டுதான் வரும்

    ReplyDelete