துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. இன்றைக்குள் முடிவுகளும் வந்து விடும்.
எம்.பி க்களின் எண்ணிக்கை அடிப்படையில் சி.பி.ராதாகிருஷ்ணன் செல்வதற்கான வாய்ப்புதான் அதிகம். என்ன மிகக்குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெல்வார்.
சி.பி.ராதாகிருஷ்ணன் வென்றால் தமிழ்நாட்டிற்கு அவர் இமய மலையையே பெயர்த்து கொண்டு வந்து விடுவார்கள் என்று சங்கிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு ஒன்றை சொல்ல வேண்டும்.
இதற்கு முன்பாக தமிழ்நாட்டிலிருந்து துணை ஜனாதிபதி, ஜனாதிபதியாக சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கடராமன், ஜனாதிபதியாக மட்டும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஆகியோர் இருந்துள்ளனர்.
அவர்கள் யாரும் தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்ததில்லை.
ஜனாதிபதிகளே எதுவும் செய்ததில்லை எனும் போது துணை ஜனாதிபதி அதிலும் பாஜககாரர் நல்லது செய்வார் என்று நினைப்பதை மூட நம்பிக்கை என்றுதான் கூற முடியும்.
No comments:
Post a Comment