தன் ஆட்சியின் அனைத்து அலங்கோலங்களுக்கும் நேருவை குறை சொல்லுவது மோடியின் முட்டாள்தனத்திற்கு உதாரணம்.
இப்போது நேபாளத்தில் நடைபெறும் பிரச்சினைகளுக்கும் காங்கிரஸ்தான் காரணம் என்று சொல்லியுள்ளார் பீகார் துணை முதல்வர்.
மோடியின் ஆதரவாளர்களும் மோடியைப் போலவே வரலாறும் தெரியாத அரசியலும் புரியாத முட்டாள்கள் என்பது இப்பதிவிலிருந்து தெரிகிறது.
இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்பது 1806 ல் வேலூரில் நடைபெற்ற சிப்பாய்கள் புரட்சிதான். 1857ல் வட இந்தியாவில் நடைபெற்ற சிப்பாய்கள் புரட்சியை முதல் விடுதலைப் போர் என்று சொல்பவர்களும் உண்டு.
முடியாட்சியாக இருந்த போதிலும் கூட 1768 முதலே நேபாளம் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. 1768 லிருந்தே தனி நாடாக உள்ள அந்த நாட்டை எப்படி ஐயா 1947 ல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி தனி நாடாக மாற்றியிருக்க முடியும்?
No comments:
Post a Comment