ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியான லடாக்கை மோடி அரசு ஜம்மு காஷ்மீரிலிருந்து துண்டித்து தனியான யூனியன் பிரதேசமாக அறிவித்தது.
லடாக், லே பகுதியின் அழகை கீழே உள்ள படத்தில் பாருங்கள்.
இப்படி அழகு கொஞ்சும் இடத்தின் இன்றைய நிலை என்ன?
இங்கே எரிந்து கொண்டு இருப்பது லே நகரில் உள்ள பாஜக அலுவலகம்.
காரணம் என்ன?
தனி யூனியன் பிரதேசம் ஆனதால் லே, லடாக் பகுதியில் தேனும் பாலும் கரை புரண்டோடும் என்றொரு ஜூம்லா வாக்குறுதியை மோடி அளித்தார்.
வழக்கம் போல எதுவும் நடக்கவில்லை. புதுவை போன்ற யூனியன் பிரதேசங்களுக்கு உள்ளதைப் போல சட்டப்பேரவையும் கிடையாது. அதனால் பிரச்சினைகளை பேச எம்.எல்.ஏ க்களும் கிடையாது.
அதனால் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று போராட்டம் நடந்தது.
3 இடியட்ஸ் படத்தில் ஷாருக்கான், நண்பன் படத்தில் விஜய் தோன்றிய கொஸாக்ஸி பசப்புகழ் பாத்திரத்தின் ஒரிஜினலான சோனம் வாங்க்சுக் என்பவர் இந்த போராட்டத்தின் மையப்புள்ளி.
பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தும் எந்த பயனும் இல்லை. அவ்வளவு சீக்கிரம் மோடி விட்டுக் கொடுத்திடுமா என்ன! அதிலும் 2024 மக்களவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற பாஜக வேட்பாளருக்கோ மூன்றாவது இடம்தான் கிடைத்தது.
ஜம்மு காஷ்மீருக்கே இன்னும் மாநில அந்தஸ்து தராத மோடி அரசு லடாக்கிற்கு அவ்வளவு சுலபமாக கொடுத்திடுமா என்பது சந்தேகமே.
பாஜக அரசின் அணுகுமுறை கலவரமாக வெடித்து நால்வர் இறந்து போக மக்களின் கோபம் பாஜக அலுவலகத்தின் மீது நெருப்பாக வெடித்துள்ளது.
உரைய வைக்கும் குளிர்ப் பிரதேசத்தை பற்றி எரிய வைத்ததுதான் மோடியின் சாதனை.
No comments:
Post a Comment