Tuesday, April 22, 2025

ஆட்டுத்தாடி - துட்டு தராதீங்க முதல்வரே

 


உச்ச நீதிமன்றம் தலையில் குட்டிய பின்பும் தன் கொழுப்பின் வெளிப்பாடாக ஆட்டுத்தாடி துணை வேந்தர்கள் கூட்டத்தை ஊட்டியில் நடத்துது. அதற்கு துணை வேறு வருது.

தமிழ்நாட்டு முதல்வர் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் சில உள்ளது.

அக்கூட்டத்திற்கு செல்லக் கூடாது என்று துணை வேந்தர்களுக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

அந்த கூட்ட செலவினம் என்று ஆட்டுத்தாடி பில் அனுப்பினால் அதனை ஏற்கக் கூடாது. முடிந்தால் மோடியிடம் வாங்கிக் கொள்ளட்டும். இல்லை என்றால் இது நாள் வரை வாங்கிய தண்டச் சம்பளத்திலிருந்து செலவழிக்கட்டும்.

அக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் துணை வேந்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மிக முக்கியமாக பயணப்படி, இத்யாதி எல்லாம் கொடுக்கக்கூடாது. அவர்களை பணி நீக்கம் செய்வதற்கான முதல் நடவைக்கையாக இது இருக்கட்டும்.

அப்படியெல்லாம் செய்தால் ஆட்டுத்தாடியின் ஆணவம் அடங்கும் . . .

மாற்றுத் திறனாளிகள் மீது காண்பித்த வீரத்தை (மாலையில் அது பற்றி எழுதுவேன்) ஆட்டுத்தாடி மீது காண்பியுங்கள். . .

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete