கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பாகத்தான் சின்னத்துரை மீது கொலைத் தாக்குதல் சக மாணவர்களால் நிகழ்த்தப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
இந்த மாணவனைப் போல் நன்றாக படியுங்கள் என்று ஆசிரியர் அறிவுரை கூறியதுதான் முதல் தாக்குதலுக்குக் காரணம்.
உயிர் பிழைத்ததும் தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றதும் இப்போதைய தாக்குதலுக்குக் காரணமா?
சில நாட்கள் முன்பாகத்தான் நெல்லை மாவட்டத்தில் காதியப் பிரச்சினை இல்லை என்று சபாநாயகர் சொன்னார். ஜாதி வெறி கொடி கட்டிப் பறக்கிறது என்றும் தீண்டாமை வெறி ஊறிப்போயிருக்கிறது என்பதும்தான் இந்த தாக்குதலுக்குக் காரணம்.
நெல்லைக்கு வந்திருப்பது புற்று நோய்.. அறுவை சிகிச்சை, கீமோ தெர்பி, ரேடியோதெரபி என எல்லா சிகிச்சைகளும் தேவை. அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகும். அரசு தவறவிட்டால் ....... நிலைமை சரி செய்ய முடியாத அளவுக்கு மிகவும் கேவலமாகி விடும்.
பிகு : இப்பதிவை முதலில் நேற்று இரவு எழுதினேன். காலையில் பார்த்தால் காவல்துறை தன் வழக்கமான கட்டுக்கதையை பரப்பி பாதிக்கப்பட்டவர் மீது பழி போடும் கீழ்த்தர உத்தியை கையாண்டுள்ளது தெரிகிறது. தீவிர சிகிச்சை தர வேண்டிய பிரச்சினைக்கு பாரசிட்டமால் கொடுத்தால் போதும் என்று அரசு கருதுகிறது. இந்த அறிக்கையெல்லாம் முதல்வருக்கு தெரியுமா?
திரு மு.க.ஸ்டாலின் அவர்களே, 2026 ல் நீங்கள் ஆட்சியை இழந்தால் அதற்குக் காரணம் உங்களால் கட்டுப்படுத்த முடியாத உங்களின் கட்சி பெரும் தலைவர்கள், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளில் இருந்து கான்ஸ்டபிள், கடை நிலை ஊழியர்கள் வரை ஊடுறுவி தங்களின் செயல்திட்டத்தை அமலாக்கிக் கொண்டிருக்கும் காவிகள். விழித்துக் கொண்டால் உங்களுக்கு நலம்.
No comments:
Post a Comment