Wednesday, April 16, 2025

40 - கணக்கில் வராததையும் கணக்கில் கொண்டு . . .

 


இன்று எல்.ஐ.சி பணியில் நாற்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளேன்.

16.04.1986 அன்று சென்னை உனைட்டெட் இந்தியா கட்டிடத்தில் எங்களுக்கான 15 நாட்கள் பயிற்சி வகுப்பில் இணைந்தேன். அப்போதெல்லாம் மூன்று மாதம் பயிற்சிக் காலம், மூன்று மாதம் தகுதி காண் பருவம். பயிற்சிக் காலம் பணிக்காலமாக கணக்கில் எடுக்கப் படாது. 1990 க்குப் பிறகு பயிற்சிக்காலம் என்று தனியாக கிடையாது. தகுதி காண் பருவம் ஆறு மாதங்களாகி விட்டது. 

எல்.ஐ.சி கணக்கில் சேர்க்காவிட்டாலும் நான் இணைந்தது இந்த நாள்தானே! அதனால் அதனை கணக்கில் கொண்டால் இந்த நாளில் நாற்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். நாற்பதாவது ஆண்டை நிறைவு செய்ய முடியாது. ஏனென்றால் 3107.2025 அன்று பணி நிறைவு.

இந்த நாற்பது ஆண்டு கால அனுபவங்களை நினைத்துப் பார்த்து நல்ல, சவாலான அனுபவங்களை பின்னர் பகிர்ந்து கொள்வேன்.

சமூகத்தில் ஒரு மதிப்பும் பொருளாதார தன்னிறைவும் எல்.ஐ.சி யால்தான் கிடைத்தது என்பதை பதிவு செய்கிறேன். அதன் பின்புலமாக இருந்தது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்தான் என்பதை இன்னும் அழுத்தமாக பதிவு செய்கிறேன்.

முதல் நாள் மனதில் இன்றும் நிலைத்திருக்கிறது.

அலுவலக பயிற்சி வகுப்பு சுய அறிமுகம், அதிகாரிகளின் வாழ்த்துரை (முதுநிலை கோட்ட மேலாளருக்கு அன்றுதான் பதவி உயர்வு ஆணை வந்திருந்ததால் அவருக்கான வாழ்த்துரை), எல்.ஐ.சி பற்றிய அறிமுகம் என்று கழிந்தது.

மாலையில்தான் முக்கியமான சம்பவம்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அறிமுகக் கூட்டம். மகத்தான் தலைவரும் அன்றைய தென் மண்டல இணைச்செயலாளர் தோழர் எஸ்.ராஜப்பா அவர்களின் கம்பீரமான உரை சங்கத்தை நோக்கி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான துவக்கப்புள்ளி. 




எப்படி மறக்க இயலும் இந்நாளை !!!

3 comments:

  1. Congratulations Comrade. Great

    ReplyDelete
  2. அருமை தோழர்.மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அருமை தோழர்.மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete