Thursday, April 17, 2025

கூமுட்டையெல்லாம் ஆட்டுத்தாடியானால் ????

 


தமிழ்நாட்டு ஆட்டுத்தாடி அநியாயமாக நிறுத்தி வைத்திருந்த மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் கொடுத்தமைக்கு கேரளாவின் புதிய ஆட்டுத்தாடி பொங்கியுள்ளது.

 


நீதிமன்றம் முடிவெடுத்தால் சட்டமன்றம் எதற்கு, நாடாளுமன்றம் எதற்கு என்று அறிவிலித்தனமாக கேள்வி எழுப்பியுள்ளது.

 சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆட்டுத்தாடிகள் அயோக்கியத்தனமாக, அராஜகமாக இழுத்தடிப்பதற்கு முற்றுப் புள்ளி வைப்பதாகத்தான் தீர்ப்பு அமைந்துள்ளது.

 ஆக உச்ச நீதிமன்றம் சட்டமன்றத்தின் மாண்பைத்தான் காப்பாற்றி உள்ளதே தவிர சட்ட மன்றத்தின் பணியையோ, அதிகாரத்தையோ எடுத்துக் கொள்ளவில்லை.

 இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் நீதிமன்றம் செய்தது ஆட்டுத்தாடிகளின் வேலையைத்தான். அதை சொல்ல இந்த ஆட்டுத்தாடிக்கு தெரியவில்லை.

கூமுட்டைகளையெல்லாம் ஆட்டுத்தாடியாக்கினால் அவை இப்படித்தான் அபத்தமாக உளறும்.

 

No comments:

Post a Comment