மாலேகான் குண்டு வெடிப்பு நிகழ்த்தியவரும் பாஜக முன்னாள் எம்.பி யுமான போலிச்சாமியார் சாத்வி பிரஞ்யாசிங் தாகூருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று தேசிய புலனாய்வு முகமை (NIA) நீதிமன்றத்திடம் கேட்டுள்ளது.
NIA ஒன்றும் சுயேட்சையான அமைப்பு இல்லை. மோடியின் ஏவல்படைகளில் ஒன்றுதான். 2017 ல் NIA தான் அந்த சாமியார் மீதான குற்றச்சாட்டுக்களை எல்லாம் நீர்த்துப் போக வைத்து பிணை கிடைக்க வழி வகுத்தது.
அதன் பின்புதான் மோடி அவருக்கு லோக்சபா டிக்கெட் கொடுத்து எம்.பி ஆக்கி அழகு பார்த்தார்.
இதுதான் இந்த அரசின் உண்மையாக முகம்.
இப்படி இருக்கையில் இந்த சாமியாருக்கு மரண தண்டனை தர வேண்டும் என்று NIA வே கேட்பது நிஜமாகவே மர்மமாகத்தான் இருக்கிறது. இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. ஏதோ பிரச்சினையை மடை மாற்ற இப்படி செய்துள்ளது. அதுவும் பஹல்காம் தாக்குதல் நடந்த அன்று இந்த முடிவு என்பதால் அந்த ஐயம் வருகிறது.
பார்ப்போம். மோடி அம்பலமாகாமலா போகப் போகிறார்!
No comments:
Post a Comment