காஷ்மீரில்
நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் மிக மோசமானது.
கணவனை இழந்த பெண்ணின் கதறலை புகைப்படத்தில் பார்க்கும் போதே மனம் பதறுகிறது, கோபம்
கொப்பளிக்கிறது. எங்கள் எல்.ஐ.சி குடும்பத்தைச் சேர்ந்த இந்தோர் கோட்டத்தில் கிளை மேலாளராக
பணியாற்றிய சுசீல் நத்தேனியல் என்பவரும் கொல்லப்பட்டவர்களில் ஒருவர்.
இந்த
தாக்குதல்களை நடத்தியவர்கள் கோழைகள். நிஜமாகவே அவர்கள் தைரியமானவர்களாக இருந்திருந்தால் ராணுவத்தினரோடு மோதி இருக்க வேண்டும்.
அப்பாவி சுற்றுலா பயணிகளை கொன்று அவர்களால் என்ன சாதிக்க முடியும்? காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு
சுற்றுலா வரக்கூடிய பயணிகளை அச்சுறுத்தி தடுப்பதைத் தவிர!
அதன்
பாதிப்பு யாருக்கு? சுற்றுலா பயணிகளை நம்பியே படகுகள் வைத்திருப்பவர்கள், குதிரை ஓட்டுபவர்கள், வாகன ஓட்டுனர்கள், வாகன உரிமையாளர்கள், உணவு விடுதிகளை நடத்துபவர்கள், ஊழியர்கள். கடைகள்
வைத்திருப்பவர்கள். இவர்கள் யாரும் பெரும் செல்வந்தர்கள் கிடையாது. ஏழை, நடுத்தர மக்கள்தான். சீசன் உள்ள இந்த காலகட்டம்தான் மிக முக்கியம்.
26
அப்பாவிகளின் உயிரைப் பறித்தவர்கள், ஆயிரக் கணக்கானவரகளின் வாழ்வாதாரத்தையும் பறித்து
விட்டார்கள். இந்த கொடுமையைச் செய்தவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர்கள் யாரென்று
கண்டறிந்து அவர்கள் கடுமையான தண்டனை பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
இச்சம்பவம்
தொடர்பாக சில சந்தேகங்கள் கடந்த கால சம்பவங்களின் காரணமாக எழுந்துள்ளது. அவற்றைப் பற்றி
பிறகு எழுதுகிறேன்.
இந்த
வெறிச்செயலை பயன்படுத்திக் கொண்டு சங்கி கட்டுவிரியன் பாம்புகள் விஷப் பிரச்சாரத்தை
துவக்கி விட்டன. ஊடக வெறியன் அர்ணாப் கோஸ்வாமி
தொடங்கி மத்யமர் ஆட்டுக்காரன் குழு சிகண்டிகள் வரை இஸ்லாமியர்கள் மீது விஷத்தை கக்கத் தொடங்கி விட்டார்கள்.
“மோடியிடம்
நீ சொல்ல வேண்டும் என்பதற்காக உன்னை கொல்லவில்லை” என்று முதலில் ஆரம்பித்தார்கள். பிறகு
ஒவ்வொருவரையும் என்ன மதம் என்று கேட்டு இந்துக்களாகக் கொன்றார்கள் என்று அடுத்த கதையை
கட்டியவர்கள் இன்னும் ஆபாசமாக சென்று “உள்ளாடைகளை அவிழ்த்துப் பார்த்து விட்டு கொன்றார்கள்”
என்று பரப்பி வருகின்றனர். 25 பேர் கொல்லப்பட்டதற்கு 250 பேரை கொல்ல வேண்டும் என்று
பழிவாங்குவோம் என ஆங்கிலத்தில் ஹேஷ்டேக் போட்டே பிரச்சாரம் செய்கின்றனர்.
கோத்ரா
சம்பவம் ( ரயில்வே அமைச்சகம் அமைத்த பானர்ஜி கமிஷன் அது ரயில் பெட்டிக்குள்ளிருந்தே
நிகழ்ந்த விபத்து என்றும் அந்த ரயில் பெட்டிகள்
நின்ற இடத்தில் வெளியிலிருந்து தாக்குதல் நடத்த வாய்ப்பில்லை என்றும் தெளிவான அறிக்கை
கொடுத்ததால் அந்த விபத்தை சம்பவம் என்றே குறிப்பிடுகிறேன்) நடந்தவுடன் எப்படி குஜராத்தில்
கலவரத்தை தூண்டி ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை கொன்றழித்தனரோ, அது போல இப்போதும் கலவரத்திற்கு
தூண்டுகிறார்கள்.
இந்துக்கள்
மனதில் இஸ்லாமியர்கள் மீது வன்மத்தை உருவாக்கத்தான்
“இந்துக்களை மட்டும் கொன்றார்கள், உள்ளாடையை அவிழ்த்துப் பார்த்தார்கள்” ஆகிய கதைகள்.
அது
பொய்ப் பிரச்சாரம் என்பதற்கு கொல்லப்பட்டவர்களில் ஒருவர் இஸ்லாமியர், இன்னொருவர் கிறிஸ்துவர்.
சையது
அதில் உசைன் ஷா என்ற உள்ளூர்க்காரர் ஒருவர். அவர் இஸ்லாமியர்.
நான்
மேலே குறிப்பிட்டிருந்த எல்.ஐ.சி கிளை மேலாளர் திரு சுசீல் நத்தானியல் . இவர் கிறிஸ்துவர்.
உண்மை
இப்படி இருக்கையில் சங்கிகள் செய்வது அயோக்கியத்தனமின்றி
வேறில்லை.
படு
கொலை செய்த பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வதந்திகளையும்
வன்மத்தையும் பரப்பும் சங்கிகளையும் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்.
பிகு:
காஷ்மீர் படுகொலை – கோட்டை விட்டார்களா வேடிக்கை பார்த்தார்களா? அடுத்த பதிவில் . . .