Wednesday, April 30, 2025

உங்களின் தியாகமே எங்களுக்கான உரமாக . . .

 





சூரியன் உதிப்பதும் தெரியாமல் அஸ்தமிப்பதும் தெரியாமல் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளான தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர வேலை வேண்டும் என்று கேட்டார்கள். பேரணியாய் திரண்டு கேட்டார்கள். முதலாளிகளால் முதலாளிகளுக்காக நடத்தப்படும் முதலாளிகள் அரசால் இந்த கோரிக்கை வைக்கப்படுவதையே சகிக்க முடியவில்லை.

 சிக்காகோ ஹே மார்க்கெட் சதுக்கத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில்  இன்றும் ஏவல் துறையாகவே செயல்படும் காவல் துறை குண்டாந்தடிகளால் தாக்கியது. துப்பாக்கியால் தோட்டாக்களை உமிழ்ந்தது. கொலை வெறி அடங்காததால் தலைமை தாங்கியவர்களை தூக்கிலிட்டு குரல் வளையை நெறித்தது.

 அந்த தியாகிகளின் நினைவைப் போற்றத்தான் உலகத் தொழிலாளர்கள் எல்லோருமே மே தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

 தோழர்களே உங்கள் தியாகம்தான் பல முன்னேற்றங்களை உழைப்பாளி வர்க்கம் அடைய அடி உரமாக இருந்தது.

 உயிரைக் கொடுத்து நீங்கள் நடத்திய போராட்டம்தான் உரிமைக்குரல் எழுப்ப உற்சாகம் தருகிறது.

 லாப வெறியில் தகிக்கும் முதலாளிகளின் வெறி இன்னும் அடங்கவில்லை. வாரத்திற்கு நூறு மணி நேரம் வேலை செய், மனைவியின் முகத்தை எவ்வளவு நேரம் பார்ப்பாய் என்றெல்லாம் உபதேசிக்கிறது.

 முதலாளிகளின் விசுவாசிகளாகவே ஆட்சிகளும் இருக்கிறது. போராட்டங்களை ஒடுக்க காவல் துறையை ஏவி விடும் போக்கு அப்படியே தொடர்கிறது.

 நீங்கள் சென்ற வழியில் போராட்டப்பாதையில் உழைப்பாளி மக்களின் உரிமை காக்க உறுதியோடு செயல்படுவோம் என்று மே தின சூளுரை ஏற்கிறோம்.

 மே தினம் வெல்க, மே தினத் தியாகிகளுக்கு செவ்வணக்கம்.

அனைவருக்கும் புரட்சிகர மே தின வாழ்த்துக்கள்

 



பாமக அராஜகக்கும்பலிடமிருந்து உயிர் தப்பிய அந்த நாள்

  

2013 ல் நடந்த சம்பவத்தை முகநூல் நினைவு படுத்தியது. வாழ்வில் மறக்க முடியாத ஒரு திகில் நாள் இது. அப்போது எழுதிய பதிவை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

 மரம் வெட்டிகளாக இருந்தவர்கள் இந்த காலகட்டத்தில் குடிசை கொளுத்திகளாக வளர்ச்சியடைந்துள்ளனர்.

 அக்கட்சியின் நடவடிக்கைகளுக்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாமல் தைலாபுரம் தோட்டத்து வாசலில் உள்ள மூன்று தலைவர்களின் சிலைகள் இருப்பதுதான் உருத்தலாகவே உள்ளது.

 அன்றைய அகில இந்திய இணைச்செயலாளரும் மத்திய மண்டல பொதுச்செயலாளருமான தோழர் பி.சன்யால் முகநூலில் இட்ட பதிவின் மொழியாக்கத்தை படித்து  பதறிப் போய் தொலைபேசியில் அழைத்து பேசியதும் இப்போது நினைவுக்கு வந்தது, வேறு சில கசப்பான சம்பவங்களும் கூட. . .

 


 

 

Wednesday, May 1, 2013

பாமக அராஜகக் கும்பலிடமிருந்து நொடிகளில் உயிர் தப்பினேன், புல்லரிக்கும் நேரடி அனுபவம்

நேற்று காலை நன்றாகவே தொடங்கியது. மாலையில் கடலூரில்   இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதன வரம்பை உயர்த்தும்  முடிவிற்காக பொதுக் கூட்டம். திருவண்ணாமலையிலும்  திருக்கோயிலூரிலும் இரண்டு முன்னணி தோழர்களின் பணி நிறைவு.  இன்னும் ஒரு கிளையில் தோழர்களோடு பேச வேண்டிய அவசியம்  இருந்தது.

திருவண்ணாமலையிலும் திருக்கோயிலூரிலும் ஓய்வு பெற்ற  தோழர்களை வாழ்த்தி சங்கத்தின் சார்பில் கௌரவித்து விட்டு இன்னொரு கிளையிலும் பணி முடித்து விட்டு கடலூர் உழவர் சந்தை அருகே பொதுக்கூட்டத்திற்கு நேரடியாக ஐந்தரை மணிக்கு வந்தேன். காவலர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. என்னவென்று  விசாரித்தால் மருத்துவரை கைது செய்ததால் போடப்பட்டுள்ள பாதுகாப்பு என்றார்கள்.

கூட்டம் சிறப்பாகவே நடந்து முடிந்தது. வேலூர் திரும்ப வேண்டும்.  என்னுடைய சொந்த வாகனத்தில் ஒரு டிரைவரோடு வந்திருந்தேன்.
புதுச்சேரி, திண்டிவனம், வந்தவாசி, செய்யாறு, ஆற்காடு சாலை
நன்றாக உள்ளதால் அந்த வழியில் திரும்ப முடிவு செய்தோம்.

புதுச்சேரியிலிருந்து ஒரு இருபது கிலோ மீட்டர் தூரத்திற்கு  எந்த பிரச்சினையும் இல்லை. மருத்துவரின் தைலாபுரம்  தோட்டம் நெருங்கும் போது பார்த்தால் சாலையில் ஏதோ  எரிந்து கொண்டிருந்தது. கொஞ்சம் வேகத்தை குறைத்து அருகில் நெருங்கினால் ஒரு இருபது வாலிபர்கள் இருப்பார்கள். அவர்கள் எனது காரின் மீது கல்லெறியத் தொடங்கினார்கள்.
தூரம் ஒரு முப்பது நாற்பது அடிதான் இருக்கும். ஒருவன் ஒரு  பெரிய பாறையை தூக்கிக் கொண்டு ஓடி வந்தான்.  இருள் நேரத்திலும் அவன் முகத்தில் பார்த்த வெறியை வாழ்வில் என்னால் என்றும் மறக்க முடியாது. மற்றவர்களும் காரை நோக்கி ஓடி வந்தார்கள். அங்கே எரிந்து  கொண்டிருந்தது ஒரு இரு சக்கர வாகனம்.


டிரைவர் திரு வெங்கடேஷ் சமயோசிதமாக ரிவர்ஸ் கியர் போட்டு பின்னாலே ஓட்டி வந்தார். நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில் ரிவர்ஸ் கியர். நல்ல வேளையாக பின்னால் வேறு எந்த வாகனமும் வரவில்லை. ஒரு அரை கிலோ மீட்டர் சென்ற பின்பு மயிலம் செல்வதற்கான மாற்றுப் பாதை வந்தது.

பாதையின் துவக்கத்தில் இருந்த கிராமத்திலோ திருவிழா நடந்து கொண்டிருந்தது. வாண வேடிக்கை பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். அருகில் நடந்து கொண்டிருந்த அராஜகத்தின் நிழல் அந்த கிராமத்தின் மீது படியவில்லை.

மயிலம் வழியாக திண்டிவனம் வந்தால் மேம்பாலம் அருகே ஒரு போர் நடந்ததன்  அடையாளங்களாக கற்களும் கண்ணாடி துகள்களும் சாலையெங்கும் கிடந்தன. காவலர்கள் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப் பட்டிருந்தனர். ஆனால் திண்டிவனம் பஜாரில் எந்த பாதிப்பும் இருந்ததாக தெரியவில்லை. பதினோரு மணிக்குக் கூட காய்கறி கடைகள் இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தன.

சரி இனி எந்த பிரச்சினையும் இல்லை என்று நினைத்தால்  செய்யாறு தாண்டியவுடன் சாலையில் ஒரு இடத்தில் போக்குவரத்து தடைபட்டிருந்தது. பாமக காரர்கள் வழக்கம் போல் மரத்தை வெட்டி சாலையை அடைத்திருந்தார்கள். காவல்துறைக்கு தகவல்  வந்திருந்ததால் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு வழி உருவாக்கிக் கொடுத்தார்கள். 

ஆனால் இந்த நிம்மதி நிலைக்கவில்லை. ஒரு பத்து கிலோமீட்டர் கடந்திருப்போம். ஆற்காடிற்கு இருபத்தி ஐந்து கிலோ மீட்டர்கள் முன்பாக மரம் வெட்டிகள் மீண்டும் கைவரிசையை காண்பித்து விட்டார்கள். ஒரே ஒரு கான்ஸ்டபிள் இருந்தார். இப்போதான் சார் வெட்டிட்டு ஓடிட்டாங்க, நான் யதேச்சையா வீடு திரும்பும் போது பார்த்தேன். ஸ்டேசனுக்கு சொல்லியிருக்கேன். ஜேசிபி வர நேரமாகும். வேறு வழியில் போயிடுங்க என்று வழிகாட்ட ஒரு பத்து கிலோ மீட்டர் சுற்றி ஆற்காடு சாலையையே மீண்டும் பிடித்தோம்

சென்னை- பெங்களூர் நாற்கர சாலையை அடைந்ததும்தான் இனி  சிக்கல் கிடையாது என்று நம்பிக்கை வந்தது. மரம் வெட்டிகளுக்கு வாய்ப்பு தராமல் சாலை அமைக்கும்போதே எல்லா மரங்களையும் அரசே வெட்டி விட்டது.


பாமக காரர்களுக்கு சில கேள்விகள்.

கைது செய்யப்பட்டது உங்கள் தலைவர். அவரை விடுவிக்க வேண்டுமென்றால் ஜாமீன் போடுங்கள், சாலை மறியல் போராட்டம் நடத்தி கைதாகுங்கள். சம்பந்தமே இல்லாதவர்களை தாக்குவது என்ன போராட்ட வடிவம்?

மரக்காணம் கலவரங்கள், தர்மபுரி கலவரங்களுக்கும் உங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கலாம். தைலாபுரம் தோட்டத்தின் வாசலில் கலவரம் நடத்த மற்ற கட்சிக்காரர்களுக்கோ, ஜாதிக்காரர்களுக்கோ தைரியம் உள்ளதா என்ன?

மரம் வெட்டி என்றால் கோபம் வருகிறது. இப்படி மரத்தை வெட்டி
போக்குவரத்தை தடை செய்பவர்களை வேறு எப்படி அழைப்பது?

உங்கள் குடும்பத்தவர்களே உயிர் போகும் நிலையில்  ஆம்புலன்ஸில் சென்றாலும் இப்படித்தான் வழியை அடைப்பீர்களா? உங்கள் ஐயாவும் சின்னய்யாவும் உயிர் காக்கும் மருத்துவத்தை படித்தார்களா? அல்லது உயிரெடுக்கும் படிப்பா?

குடிக்கக் கற்றுக் கொடுத்து இளைய சமுதாயத்தை கழகங்கள் சீரழித்துள்ளதாக குற்றம் சுமத்த என்ன யோக்கியதை உங்களுக்கு
உள்ளது? ஜாதிய வெறியையும் வன்முறைக் கலாச்சாரத்தையும்
கற்றுக் கொடுத்து சீரழிப்பது நீங்கள் அல்லவா?

அசம்பாவிதம் எதுவுன் நிகழாததால் என்னால் இப்படி பதிவு  எழுதி கேள்வி கேட்க முடிகிறது. திகிலான அனுபவம் என்று  சொல்ல முடிகிறது.

ஏதேனும் நிகழ்ந்திருந்தால்?????????

 

Tuesday, April 29, 2025

போலி பேராசிரியனுக்கு அரளி விதை போதும் . . .

 


நெனப்புதான் பொழப்பை கெடுக்கும் என்பார்கள். நெல்லிக் கனி கிடைத்தால் துக்ளக் விஷமூர்த்தி அதனை ஆட்டுக்காரனுக்கும் போலிப் பேராசிரியன் ராம.சீனுவுக்கும் கொடுப்பானாம். அந்த அளவுக்கு இவனுங்க தேசிய உணர்வை ஊட்டறாங்களாம். இதை கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் தன் ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ளான் போலிப் பேராசிரியன்.


உனக்கெல்லாம் அரளி விதையைத்தான் அரைச்சு கொடுக்கனும் என்று அங்கே கமெண்ட் செய்தேன். அதைத்தான் மேலே உள்ள படத்திலும் சொல்லியுள்ளேன். இவனுங்க மட்டும் நெல்லிக்கனி சாப்ப்பிட்டா உலகம் தாங்குமா? 

“தல”ய புறக்கணிக்குதா “தி இந்து” ????

 


தமிழ் நாளிதழ்கள் எல்லாம் முதல் பக்கச் செய்தியாகவும் சுவரொட்டி செய்தியாகவும் நடிகர் அஜித் குமார் பத்ம பூஷன் பெற்றதை கொண்டாடும் வேலையில் ஆங்கில இந்து மட்டும் பத்ம விருது பெற்றவர்களின் புகைப்படங்களை வெளியிடுகையில் அவரது படத்தை  போடவில்லை.

 


அப்படியென்றால் அஜித்தை புறக்கணிக்கிறதா அந்த இதழ்? அந்த இதழை அஜித் ரசிகர்கள் புறக்கணித்தால் என்ன ஆகும்?

 பத்த வச்சுட்டியே பரட்டை . . .

 பிகு: எப்பவுமே சீரியஸ் பதிவுதான்  எழுதனுமா?

 

Monday, April 28, 2025

ரெட்ரோ - அவசரப்பட்டு அசிங்கப்பட்ட சங்கி

 


வரும் மே மாதம் முதல் தேதி சூர்யாவின் புதுப்படம் ரெட்ரோ   வெளியாகிறது. 

சூர்யாவின் மீதும் ஜோதிகா மீதும் எப்போதும் வெறுப்பையும் விஷத்தையும் வன்மத்தையும் கக்கும் அயோக்கிய சங்கிகள், இந்த திரைப்படத்திற்கு எதிராகவும் வன்மத்தை கக்க தொடங்கி விட்டனர்.


பாவம் அந்த அடிமுட்டாள் கம் அயோக்கிய சங்கி! இன்னும் வெளியாகாத படத்தை எப்படி பார்த்தாய், திருட்டு விசிடி தயாரிக்கறவனா நீ என்றெல்லாம் கேட்டு அசிங்கப்படுத்தி விட்டார்கள்.

அடேய் சங்கிகளா! உங்களால் எந்த திரைப்படத்தையும் ஓட்டவும் முடியாது, அரங்கை விட்டு ஓட வைக்கவும் முடியாது. எதுக்குடா வீண் பெருமை? 

போர், போர் என பொங்கும் சங்கிகளெல்லாம் . . .

 


கீழேயுள்ள பதிவுகள் எல்லாம் சங்கிகளுடையது. போர், போர் என்று பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிலே ஆருத்ரா திருடன் அமர் பிரசாத் ரெட்டியும் அதில் அடக்கம். இந்த பதிவுகளை முதலில் படியுங்கள்.







மேலே உள்ள படம் போல இந்த போர் வெறி சங்கிகள் எல்லாம், அவர்களை இந்திய ராணுவம் அழைத்தால் சமையலறை மேடைக்கடியில் ஒளிந்து கொண்டு விடுவார்கள் என்பது நிச்சயம்.

56 இஞ்சர் போரெல்லாம் தொடுக்க மாட்டார் என்ற தைரியத்தில் சொல்லப் படும் வெட்டி வார்த்தைகள் அவை

முன்பே நீக்கியிருக்கலாமே முதல்வரே

 


துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கிய போதே பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கியிருக்கலாம்.

உச்ச நீதிமன்றம் முதல் முறை சொன்ன போதே செந்தில் பாலாஜியையும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியிருக்கலாம்.

இன்று எடுத்த முடிவை நீங்கள் அன்றே எடுத்திருந்தால் நீதிமன்றங்களால் குட்டுப்படும் நிலைமையை தவிர்த்திருக்கலாமே! உங்களுடைய ஆலோசகர்களையும் மாற்றினால் இன்னும் நல்லது. தவறாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். முழுதுமாக சீர் கெட்டுப் போன காவல்துறை நிர்வாகத்தையும் சரி செய்வது காலத்தின் கட்டாயம். 

Sunday, April 27, 2025

பட்டியல் போடலாமா இளைய (சங்கி)ராஜா?

 




இசையைத் தாண்டி வேறெதற்காவது இளையராஜா வாய் திறந்தால் அது அபஸ்வரமாகவே இருக்கிறது. 

மோடியைப் போல இந்தியாவுக்காக பாடுபட்ட பிரதமர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பட்டியல் போடலாமா என்று கேட்கிறார்.

மோடியைப் போல இந்தியாவை சீரழித்த பிரதமர்கள் யாரும் கிடையாது என்ற உண்மையை கூட புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு சங்கியாக மாறியிருக்கிறார்.

விரிவாக ஒரு பட்டியல் நாளை நான் போடுகிறேன்.  அதை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு அவருக்கு மனம் இருக்குமா தெரியவில்லை.

அவருடைய வீழ்ச்சி மனதிற்கு வருத்தமாக இருக்கிறது.  இனி அவரால் மீள முடியுமா என்பது சந்தேகமே. . .


Saturday, April 26, 2025

மிருதங்கச் சக்ரவர்த்தியும் பேபியும்

 





சில வருடங்கள் முன்பு எழுதிய பதிவை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன். மிருதங்கச் சக்ரவர்த்தி என்ற நடிகர் திலகத்தின் படத்தில் அவருக்காக மிருதங்கம் வாசித்த இசை மேதை சங்கீத கலாநிதி உமையாள்புரம் சிவராமன் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய பொதுச்செயலாளர் தோழர் எம்.ஏ.பேபி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது.

 

தோழர் எம்.ஏ.பேபியின் இசை ஞானம் பற்றியும் திரு உமையாள்புரம் சிவராமன் அவர்களின் மத நல்லிணக்கச் சிந்தனையைப் பற்றியும் அறிந்து கொள்ள உதவும் கட்டுரை இது. 

Wednesday, January 6, 2016

சக்ரவர்த்திக்கு பேபி பாராட்டு

இன்றைய தீக்கதிர் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

மிருதங்கச் சக்ரவர்த்தியான திரு உமையாள்புரம் சிவராமன் அவர்களது எண்பதாவது பிறந்த நாளை ஒட்டி அவரைப் பாராட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எம்.ஏ.பேபி அவர்கள் தேசாபிமானி நாளிதழில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது. 

திரு உமையாள்புரம் சிவராமன் அவர்களின் மெய் சிலிர்க்க வைக்கும் இசையை கேட்டு மகிழ்ந்துள்ளேன். அவரது சிறந்த குணம் பற்றி இக்கட்டுரை மூலமே அறிந்து கொண்டேன். 

அவருக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள்.

தோழர் எம்.ஏ.பேபி அவர்களுக்குள் இருக்கிற கலா ரசிகனையும் இக்கட்டுரை மூலமாகவே அறிந்து கொண்டேன்.




 காவிரிக் கரையின் நாதப் பிரவாகம்


                                                                                     எம்.ஏ.பேபி

 தனது பயணத்தை ஆர்ப்பரித்துத் துவங்கும் காவிரி தமிழக எல்லையைத் தொடும் போது சாந்தமாக ஓடிவருகிறாள். அதன்பின் சமதளங்களில் தனது அமைதியான பயணத்தைத் தொடர்கிறாள். அது ஒரு அழகிய காட்சியாகும். அதேபோல் காவிரி கரையோரம் அமைந்துள்ள உமையாள் புரத்திலிருந்து எழும் மிருதங்கநாதம் சாந்தமும் அழகும் நிறைந்ததாகும். நாதத்தின் பரிணாமங்கள் உமையாள்புரம் சிவராமனின் விரல்களின் வாயிலாக உயிர்த்தெழுகிறது. ஒரு சங்கீத பிரவாகம் போல் அனுபவிக்கக்கூடிய மிருதங்கநாதம்.

கர்நாடக சங்கீதத்தின் சாந்தமான அகநிலை அழகை மிருதங்கத்தின் வாயிலாக வெளிப்படுத்தும் கலைஞனாக இந்த 80 வயதுக்காரர் இன்றும் நம்முடன் இருக்கிறார். ஆன்மாவுக்குரிய இன்ப - துன்பங்கள் மூலம் பெறும் ஒரு கலை அனுபவமாகும் உமையாள்புரத்தின் மிருதங்கநாதம். கச்சேரியின் இறுதியில் இசைக்கப்படுவது எனக் கருதும் ‘தனியாவர்த்தனம்‘ பலரது கைகளில் காதைப் பிளக்கும் வெடிச் சத்தமாகும். ஆனால் காவிரி பிரவாகம் போல் சாந்தமாகத் துவங்குகிறது உமையாள்புரத்தின் தனியாவர்த்தனங்கள். 

தாளத்தின் தாழ்ந்தும், உயர்ந்துமுள்ள நாதத்தின் சுகமான புயலை உருவாக்கி, நிறை செய்து ஒன்றும் நடக்காததுபோல் அவர் மேடையில் அமர்ந்திருப்பதைப் பார்ப்பவர்கள் அதிசயித்துப் போவார்கள்.கர்நாடக இசைக் கச்சேரிகளின் பொற்காலமான இருபதாம் நூற்றாண்டின் பின்பாதியில் பெரும் புகழ்பெற்ற பல்வேறு இசைக் கலைஞர்களுக்கு மிருதங்கம் வாசித்ததன் மூலம் உமையாள்புரம் இசை உலகின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினார், 

முசிறி சுப்பிரமணிய ஐயர், ஜி.என்.பாலசுப்பிரமணியம், அரியாக்குடி ராமானுஜ அய்யங்கார், மதுரை மணி ஐயர், மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர், எம்பார் விஜயராகவாச்சாரி, சாத்தூர் கிருஷ்ணன், பல்லடம் சஞ்சீவராவ், பாப்பா வெங்கிடராமையா, துவாரம் வெங்கிடசாமி நாயுடு, டின்.என்.ராஜரத்தினம் பிள்ளை, முடிகொண்டான் வெங்கிடராம ஐயர், ஆலத்தூர் சகோதரர்கள், செம்மங்குடி சீனிவாச ஐயர், வி.சௌடய்யா ஆகியோருக்கு மிருதங்கம் வாசித்தபோது உமையாள்புரம் இளைஞனாக இருந்தார்.டாக்டர் பி.காசிவிஸ்வநாத ஐயர், கமலாம்பாள் தம்பதியருக்கு மகனாகப்பிறந்த சிவராமனுக்கு சிறந்த கல்வி கிடைத்தது. இளங்கலை பட்டமும், சட்டப்படிப்பும் பயின்ற பின்புதான் அவர் முழு நேரமும் இசைக்கென செலவிடத் துவங்கினார். காசிவிஸ்வநாத ஐயர் டாக்டராக இருந்த போதிலும் ஒரு சிறந்த இசை கலைஞராகவும் விளங்கினார். வாய்ப்பாட்டு மட்டுமல்லாது வயலின் மற்றும் மிருதங்கமும் நன்றாக வாசிக்கக் கூடியவராகத் திகழ்ந்தார். இசைக் கலைஞர்களுக்கு மருத்துவம் பார்ப்பவர் என்ற முறையில் அந்த காலத்தில் புகழ்பெற்று விளங்கிய இசைக் கலைஞர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

 கர்நாடக சங்கீதத்தில் புகழ்பெற்று விளங்கிய திருக்கொடிக்காவல் கிருஷ்ணய்யரின் சீடர்தான் காசி விஸ்வநாத அய்யருக்கு இசை பயிற்றுவித்தார். காசிவிஸ்வநாத அய்யரின் வீடு விருந்தினர்களாக வந்த இசைக் கலைஞர்களால் எப்போதும் மனமகிழ்ச்சி தருவதாகவே இருந்தது.இசையால் நிரம்பி வழிந்தது. இத்தகைய சூழலில்தான் சிவராமன் வளர்ந்தார். அவ்வாறு சங்கீதத்தை விட்டுப் பிரிய இயலாத உறவு அங்கு துவங்கியது. பெரிய இசைக் கலைஞர்கள் வீட்டின் பால்கனியிலிருந்து பாடும் வேளையில் சிறுவனான சிவராமன் அருகில் உள்ள ஏதாவது ஒன்றில் தாளம் தட்டித் துவங்குவார். இதைக் கவனித்த அவரது பாட்டி சிவராமனுக்கு ஒரு கஞ்சிராவைப் பரிசாக வழங்கினார். தாளமிடுவதில்தான் சிவராமனுக்கு விருப்பம் என்பதைக் கண்டுகொண்ட அவரது தந்தை அவரை மிருதங்கத்தின் பக்கம் திருப்பிவிட்டார். பின்னாளில் புகழ்பெற்ற மிருதங்க வித்வானாக மாறிய போதிலும் அவருக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாகவும், விமர்சகராகவும் விளங்கியது அவர் தந்தையே.சிவராமனின் ஏழாவது வயதில் ஆறுபதி நடேச ஐயர்தான் அவருக்கு மிருதங்கத்தின் பாலபாடங்களைக் கற்றுக் கொடுத்தார். 

1945ம் ஆண்டு கும்பகோணத்தில் உள்ள காளகஸ்தீஸ்வரசுவாமி கோவிலில் அரங்கேற்றம் நடைபெற்றது. அன்று கும்பகோணம் சீனிவாச அய்யரின் கச்சேரிக்கு மிருதங்கம் வாசித்தார். 

தொடர்ந்து தஞ்சாவூர் நடையில் மிருதங்கம் வாசிப்பதில் வல்லவரான தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரின் வாயிலாக மேலும் பல பாடங்களை கற்றறிந்தார் சிவராமன். சங்கீதத்தின் அறிவு உலகம் சிவராமனுக்கு தனது கதவுகளைத்திறந்துவிட்டது. 1948ல் வைத்தியநாத ஐயர் காலமான பிறகு பாலக்காடு மணி ஐயரைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டார். மிருதங்கத்திலிருந்து சரியான நாதத்தை வெளிக்கொணரும் உத்திகளை மணி ஐயரிடமிருந்து கற்றுக் கொண்டார். அதன்பிறகு கும்பகோணம் ரகு ஐயரிடம் பாடங்கள் பயின்றார். இந்த காலகட்டத்தில் பல புகழ்பெற்ற இசைக் கலைஞர்களின் கச்சேரிகளுக்கு மிருதங்கம் வாசித்தார்.16ம் வயதில் சிவராமன் தனது தாயை இழந்தார். 1951-ல் மணி ஐயரின் ஆலோசனைப்படி தனது வசிப்பிடத்தை சென்னைக்கு மாற்றினார். இந்த காலகட்டத்தில் கல்லிடைக்குறிச்சி மகாதேவ பாகவதரிடம் வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டார். 

தனது சொந்த கல்விக்குச் செலவழித்ததைவிட அதிக நேரம் தனது குருமார்களுடன் செலவழித்து கலை ஆய்வு நடத்தினார் சிவராமன். மூத்த வழக்கறிஞர்களின் கீழ் இளைய வழக்கறிஞர்கள் பயிற்சி பெறுவது போலத்தான் இதுவும் என்று ஒரு வழக்கறிஞருமான உமையாள்புரம் ஒருமுறை குறிப்பிட்டார். உங்களுக்கு வழக்கறிஞர் வேடம் தேவையில்லை என்று அவரது நலம் விரும்பிகள் கூறினார்கள். அதில் வழக்கறிஞர்களும், இசைக் கலைஞர்களும் உட்படுவர். மிருதங்கம் வாசிப்பதில் உறுதியுடன் நின்றால் பல உயரங்களைத் தொட இயலும் என்று அவர்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தினர். அது உண்மையானது என்று இன்று உமையாள்புரம் கருதுகிறார்.உமையாள்புரம் கையாண்ட முறைகள் மிருதங்கநாதத்தின் அடையாளங்களாக மாறின. பெரிய அளவில் உடல் அசைவுகள் இல்லாமலேயே மிகச் சிறந்த நாதத்தை வழங்குவதே அவரது முறையாக இருந்தது. மிருதங்கத்திலிருந்து எழ வேண்டியது நாதம்தான். மாறாக, வெடி ஓசை அல்ல என்ற நம்பிக்கைதான் அவரை முன்னோக்கிச் செலுத்தியது. தாளம் ஒரு இரைச்சல் அல்ல, அது நாத அதிசயமாகும் என்பதை உணர்த்துவதற்குத்தான் உமையாள்புரம் முயற்சித்தார்.

 மிருதங்கத்தைக் கையாளும் முறையும், நிசப்தமும் இடையிடையே உள்ள அதிர்வுகளும் அவரது மிருதங்க வாசிப்பிற்கு மெருகூட்டுகின்றன. பாடகர்களின் திறமையை மேலும் வெளிக்கொணர்வதுதான் உமையாள்புரம் என்ற பக்கவாத்தியக்காரரின் தனிச்சிறப்பு.தாளவாத்தியம் என்றில்லாமல், ஒரு நாதவாத்தியமாகத்தான் மிருதங்கத்தை உமையாள்புரம் கருதுகிறார். 


அவர் மிருதங்கத்தின் வாயிலாக இசையை வெளிப்படுத்துகிறார். வாய்ப்பாட்டுக் கச்சேரியில் பாடகருக்கு முழுமையான சங்கீத ஆதரவும், மிருதங்கக் கச்சேரி நடத்தும்போது மிருதங்கத்தின் மூலமாக ஒரு சங்கீதக் கச்சேரியையும் அவர் லட்சியமிடுகிறார். தனது நடையை ‘சிவராமன் பாணி’ என்று அவர் கூறுகிறார்.கற்பனை வளத்தின் சங்கீத சொரூபமான எம்.டி.ராமநாதனுக்கும், அரியாக்குடியன் ப்ரியப்பட்ட சீடரான பாலக்காடு கே.வி.நாராயணசாமிக்கும் உமையாள்புரம் மிருதங்கத்தை அர்ப்பணிப்பது ரசிகர்களுக்கு வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு அனுபவமாகும். நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கோழிக்கோட்டில் நடைபெற்ற 

செம்மங்குடியின் ஒரு கச்சேரி எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத ஒரு சங்கீத அதிசயமாகும். மிகப் பெரிய பாடகரின் ஆலாபனைத் திறமையோடு ஒத்திணைந்தும், சல்லாபித்தும் இசைக்கும் லால்குடியின் வயலினும், உமையாள்புரத்தின் மிருதங்கமும் சேரும்போதுதான் ஒன்றுக்கொன்று ஒப்பிட இயலாத அனுபவங்கள் ரசிகர்களுக்குக் கிடைக்கிறது.சமூகத்தில் ஏற்படும் சலனங்களைக் கவனிப்பதற்கும், அன்பால் தனது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் உமையாள்புரம் தயாரான சந்தர்ப்பங்களை நினைத்துப் பார்க்கிறேன்.

 சென்னையில் நடைபெற்ற கியூபா ஆதரவு மாநாட்டின் துவக்கமாக உமையாள்புரம், வழங்கிய மிருதங்கவாசிப்பை ‘மிருதங்க சக்கரவர்த்தியாக நடித்த சிவாஜிகணேசன் உள்பட சபையினரின் இடைவெளியில்லாத கைதட்டலைப் பெற்றது. அயோத்தியில் பாபர் மசூதி தகர்க்கப்பட்ட பின்பு நடைபெற்ற முதலாவது மதச்சார்பற்ற கலாச்சார சங்கமத்திலும் உமையாள்புரம் தனது தாள அர்ச்சனையுடன் பங்கேற்றார்.மதவாதம் சமூகத்தில் ஏற்படுத்திய மாபெரும் தவறை திருத்திக் கொள்வதற்கு தனது மிருதங்க இசையொலியின் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.நாடு பத்மவிபூஷன் விருது வழங்கி உமையாள்புரத்தை கவுரவித்தது. அதற்கும் முன்பு பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய விருதுகள் அவரைத் தேடி வந்தன. 2001ல் கர்நாடக சங்கீதத்தின் பெருமைக்குரிய விருதான ‘சங்கீதகலாநிதி’ விருதை மதறாஸ் மியூசிக் அகாதெமி உமையாள்புரத்திற்கு வழங்கிச் சிறப்பித்தது. கேரள பல்கலைக் கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 

மத்திய அரசின் சங்கீத - நாடக அகாதெமியின் விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளையும், அங்கீகாரத்தையும் அவர் பெற்றுள்ளார். கடைசியாக ‘ஸ்வரலயா’ விருதும் அவரைத் தேடி வந்தது. உலகெங்குமுள்ள இந்திய சங்கீத கலா ரசிகர்களுக்கு முன்னால் அவர் மிருதங்கம் வாசித்துள்ளார். கடந்த டிசம்பர் 17 அன்று 80 வயதைத் தொட்ட உமையாள்புரத்தின் இசைச் சேவை மேலும் அதிக காலம் இவ்வுலகிற்குக் கிடைக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.



எல்.ஐ.சி யால் மட்டுமே முடியும்

 



பஹல்காம் தாக்குதலில் உயிர் நீத்தவர்களில் எல்.ஐ.சி பாலிசிதாரர்கள் இருந்தால் அவர்களின் பட்டுவாடா கேட்புரிமங்கள் உடனடியாக செய்யப் படும் என்றும் அதற்காக சில சிறப்பு தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் எல்.ஐ.சி அறிவித்துள்ளது. அரசின் பட்டியலில் பெயர் இருந்தால் போது இறப்புச் சான்றிதழ் கூட  அவசியமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

24.04.2025 அன்றே நெல்லூர் கோட்டம் ஒரு கேட்புரிமத்தை பட்டுவாடா செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

இது போல துயரில் தவிப்பவருக்கு வேகமாக எந்த ஒரு தனியார் நிறுவனமும் சேவை செய்யாது என்றும் பொதுத்துறை எல்.ஐ.சி யால் மட்டுமே சாத்தியம் என்று எங்களால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும்.

இது புதிதல்ல.

சுனாமி தாக்கிய போது கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் 24 மணி நேர சேவை செய்தோம்.

காட்பாடி தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலை விபத்தில் எண்ணற்ற தொழிலாளர்கள் இறந்த போது வேலூர் மையத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் 24 மணி நேர உதவி மையம் செயல்பட்டது.

இது எல்.ஐ.சி யின் பாரம்பரியம்.

சுனாமி சமயத்தில் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் அவ்வளவாக இந்தியாவில் கால் பதிக்கவில்லை (இப்போதும் கூட அவர்களால் எல்.ஐ.சி யின் நிழலைக் கூட நெருங்க முடியவில்லை). ஆனால் சுனாமி தாக்கிய வேறு சில நாடுகளில் அங்கே இருந்த தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் , "சுனாமி என்பது கடவுளின் செயல். அதனால் பாலிசி பணத்தை தர முடியாது" என்று மறுத்து விட்டன. பாலிசிதாரர்களின் உறவினர்கள் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.

மும்பை தாக்குதலின் போது வீர மரணம் அடைந்திட்ட காவல்துறை உயரதிகாரி ஹேமந்த் கார்கரேவின் இறப்புக் கேட்புரிமத்தை எல்.ஐ.சி மறுநாளே வழங்கியது. அவர் இன்னொரு தனியார் நிறுவனத்திலும் பாலிசி எடுத்திருந்தார். உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் ஹேமந்த் கார்கரே மீட்பு நடவடிக்கைக்குச் சென்றார் என்று சொல்லி பணம் கொடுக்க மறுத்து விட்டது.

இப்படிப்பட்ட தனியார் கம்பெனிகள் கொழிக்க வேண்டும் என்பதற்காக மோடி அரசு எல்.ஐ.சி யின் செயல்பாடுகளை, வணிகத்தை சீர்குலைக்க சில சதிகளை செய்து கொண்டிருக்கிறது.

அதை எந்நாளும் நாங்கள் அனுமதியோம்.


Friday, April 25, 2025

துயர வேளையில் ஆட்டுத்தாடியால் சின்ன ஆறுதல்

 


பஹல்காம் தாக்குதல் தந்த பெருந்துயரம், சங்கிகள் நடத்தும் மத வெறிப் பிரச்சாரம் அளிக்கும் பெரும் எரிச்சல்,  இவற்றுக்கிடையே ஒரு சின்ன ஆறுதல் தமிழ்நாட்டின் துணை வேந்தர்கள் மூலம் கிடைத்துள்ளது.

உதகையில் மாநில அரசின் செலவில் ஆட்டுத்தாடி ஏற்பாடு செய்த பல்கலைக் கழக  துணை வேந்தர்கள் கூட்டத்தில் அழைக்கப்பட்ட  41 துணை வேந்தர்களில் 32 பேர் ஆட்டுத்தாடியின் அழைப்பை புறக்கணித்துள்ளனர். தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களைத் தவிர பல தனியார் பல்கலைக் கழக துணை வேந்தர்களும் புறக்கணித்துள்ளனர்.



 ஆணவம் தலைக்கேறி அலைந்து கொண்டிருந்த ஆட்டுத்தாடிக்கும் துணைக்கும்  இன்று கிடைத்திருக்கிற சிறப்பான விருந்து உண்மையிலேயே மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.

 வேந்தராக இருந்தாலும் நீ வேண்டாத நபர்தான்.

 இன்னும் எத்தனை நாளைக்கு வெட்கம் கெட்ட பிழைப்பை தமிழ்நாட்டில் நடத்தப் போகிறாய் ஆரெஸெஸ் ரெவி?

 ஆட்டுத்தாடியை மொட்டை அடித்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதையில் உட்கார வைத்து ஊர்வலம் நடத்தினாலும் நாற்காலியை விட மறுக்கிற கேவலமான பிறவியாக இருந்தால் என்ன செய்ய முடியும்?

 

Thursday, April 24, 2025

மரண தண்டனை கேட்பதன் மர்மம் என்ன?

 




மாலேகான் குண்டு வெடிப்பு நிகழ்த்தியவரும் பாஜக முன்னாள் எம்.பி யுமான போலிச்சாமியார் சாத்வி பிரஞ்யாசிங் தாகூருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று தேசிய புலனாய்வு முகமை (NIA)  நீதிமன்றத்திடம் கேட்டுள்ளது.

NIA ஒன்றும் சுயேட்சையான அமைப்பு இல்லை. மோடியின் ஏவல்படைகளில் ஒன்றுதான். 2017 ல் NIA தான் அந்த சாமியார் மீதான குற்றச்சாட்டுக்களை எல்லாம் நீர்த்துப் போக வைத்து பிணை கிடைக்க வழி வகுத்தது.

அதன் பின்புதான் மோடி அவருக்கு லோக்சபா டிக்கெட் கொடுத்து எம்.பி ஆக்கி அழகு பார்த்தார். 

இதுதான் இந்த அரசின் உண்மையாக முகம்.

இப்படி இருக்கையில் இந்த சாமியாருக்கு மரண தண்டனை தர வேண்டும் என்று  NIA வே கேட்பது நிஜமாகவே மர்மமாகத்தான் இருக்கிறது. இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. ஏதோ பிரச்சினையை மடை மாற்ற இப்படி செய்துள்ளது. அதுவும் பஹல்காம் தாக்குதல் நடந்த அன்று இந்த முடிவு என்பதால் அந்த ஐயம் வருகிறது.

பார்ப்போம். மோடி அம்பலமாகாமலா போகப் போகிறார்!

கல்லறை கட்டப்படும் முன்பே பிரச்சாரமா மோடி?

 


காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் இறந்து போனவர்களின் இறுதிச் சடங்கு இன்றுதான் நடந்திருக்கும். 

எந்த குடும்பங்களில் கல்லறையோ நினைவுச் சின்னமோ அமைக்கும் வழக்கம் இருந்தால் அவர்கள் அதைப் பற்றி  இன்னும் நினைத்திருக்கக் கூட மாட்டார்கள்.

காலையில் எழுதிய பதிவின் படி "பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதன் பலனை பாஜக அறுவடை செய்யும்" என்பதை மோடி நிஜமாக்கி விட்டார்.

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரக்கூட்டத்தை துவங்கி விட்டார். அதிலே அவரது வழக்கமான வாய்ச்சவடாலும் உண்டு.


ஒரு மிகப் பெரிய துயரம் நடந்துள்ளது. இந்த சூழலிலும் இவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றார் என்றால் இவரையெல்லாம் எப்படி மனிதன் என்று சொல்வது! 

அதே போலத்தான் நேற்று விருந்து வைத்த எடப்பாடியையும்!

என்ன ஜென்மங்கள் இதெல்லாம்! 

Wednesday, April 23, 2025

காஷ்மீர் படுகொலை – கோட்டை விட்டார்களா வேடிக்கை பார்த்தார்களா?

 



 

காஷ்மீர் படுகொலை தொடர்பாக சில சந்தேகங்கள் இருப்பதாக நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

 

இப்படுகொலை என்பது மத்திய அரசினுடைய படு தோல்வி. 

 

பஹல்காம் பகுதி என்பது அதி பாதுகாப்பு பகுதி. இங்கே இது போன்றதொரு தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது என்பது உளவுத்துறைக்கு தெரியாதா? அப்படி உளவுத்துறைக்கும் தெரிந்தும் அவர்கள் மத்தியரசுக்கு சொல்லவில்லையா அல்லது கிடைத்த தகவலை மத்தியரசு அலட்சியப் படுத்தியதா?

 

HIGH SECURITY ZONE என்று வரையறை செய்யப்பட்ட பகுதியில் ஏன் ஒரு ராணுவ வீரன் கூட இல்லை?  சங்கி சுமந்து கூட நான் அக்டோபர் மாதத்தில் அங்கே போன போது ஏராளமான ராணுவ வீரர்கள் இருந்தார்கள் என்று சொல்லியுள்ளார். அக்டோபரை விட இப்போதுதான் சுற்றுலா சீஸன். இப்போது இன்னும் அதிகமான பாதுகாப்பு  இருந்திருக்க வேண்டும். ஆனால் இல்லை. இது தற்செயலானதா? திட்டமிட்டதா?

 

புல்வாமாவில் தாக்குதலுக்கு வாய்ப்புள்ளது என்று உளவுத்துறை அறிக்கை கொடுத்தும்  தேர்தல் ஆதாயத்திற்காக அத்தகவலை அலட்சியம் செய்து 56 ரிசர்வ் போலீஸ் படையினரை சாக விட்டதுதான் மோடியின் பாரம்பரியம். பீகார் மாநிலத் தேர்தல் நெருங்கி வரும் நேரமென்பதால் தாக்குதல் நடக்கட்டும் என்று வேடிக்கை பார்த்ததா இந்த அரசு?

 

அமெரிக்க துணை ஜனாதிபதி இந்தியாவில் இருக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது ஒரு புறம் இருக்க,  எஜமான் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி இந்தியாவில் இருக்கையில் மோடி சவுதி அரேபியா சென்றது ஏன்?  ஒரு வருடமாகியும் மணிப்பூர் செல்ல தயாராக இல்லாத போது சவுதியிலிருந்து பாதியில் வந்து காஷ்மீர் விரைந்த்தன் நோக்கம் என்ன?

 

ஏப்ரல் 19 அன்று காஷ்மீர் செல்ல வேண்டிய மோடி அந்த பயணத்தை ரத்து செய்தது ஏன்?

 

75 வயதானதும் பிரதமர் நாற்காலியை காலி செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ், மோடியிடம் சொன்ன நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது, 56 இஞ்சரால்தான் தேசத்தை காப்பாற்ற முடியும் என்ற சூழலை உருவாக்கி நாற்காலியில் ஒட்டிக் கொள்ளும் ஏற்பாடா? அல்லது இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்பது என்ற பெயரில் மோடியை கழட்டி விடும் முயற்சியா?

 

சம்பவம் செய்தது தீவிரவாதிகள்தான். ஆனால் அதன் பலனை அறுவடை செய்யப் போவது பாஜக தான். ஆட்சிக்காக எந்த அளவிற்கும் கீழிறங்கக் கூடியவர்கள் . . .அதனால்தான் கிடைத்த தகவல்களை அலட்சியம் செய்து வேடிக்கை பார்த்தார்களா என்று சந்தேகம் வருகிறது.

 

 

 

காஷ்மீர் படுகொலை – கண்டனங்கள் , வெறி பரப்புவோருக்கும்

 


காஷ்மீரில்  நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் மிக மோசமானது. கணவனை இழந்த பெண்ணின் கதறலை புகைப்படத்தில் பார்க்கும் போதே மனம் பதறுகிறது, கோபம் கொப்பளிக்கிறது. எங்கள் எல்.ஐ.சி குடும்பத்தைச் சேர்ந்த இந்தோர் கோட்டத்தில் கிளை மேலாளராக பணியாற்றிய சுசீல் நத்தேனியல் என்பவரும் கொல்லப்பட்டவர்களில் ஒருவர்.

 இந்த தாக்குதல்களை நடத்தியவர்கள் கோழைகள். நிஜமாகவே அவர்கள் தைரியமானவர்களாக  இருந்திருந்தால் ராணுவத்தினரோடு மோதி இருக்க வேண்டும். அப்பாவி சுற்றுலா பயணிகளை கொன்று அவர்களால் என்ன சாதிக்க முடியும்? காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு சுற்றுலா வரக்கூடிய பயணிகளை அச்சுறுத்தி தடுப்பதைத் தவிர!

 அதன் பாதிப்பு யாருக்கு? சுற்றுலா பயணிகளை நம்பியே படகுகள் வைத்திருப்பவர்கள், குதிரை ஓட்டுபவர்கள்,  வாகன ஓட்டுனர்கள், வாகன உரிமையாளர்கள்,  உணவு விடுதிகளை நடத்துபவர்கள், ஊழியர்கள். கடைகள் வைத்திருப்பவர்கள். இவர்கள் யாரும் பெரும் செல்வந்தர்கள் கிடையாது.  ஏழை, நடுத்தர மக்கள்தான்.  சீசன் உள்ள இந்த காலகட்டம்தான் மிக முக்கியம்.

 26 அப்பாவிகளின் உயிரைப் பறித்தவர்கள், ஆயிரக் கணக்கானவரகளின் வாழ்வாதாரத்தையும் பறித்து விட்டார்கள். இந்த கொடுமையைச் செய்தவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர்கள் யாரென்று கண்டறிந்து அவர்கள் கடுமையான தண்டனை பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

 இச்சம்பவம் தொடர்பாக சில சந்தேகங்கள் கடந்த கால சம்பவங்களின் காரணமாக எழுந்துள்ளது. அவற்றைப் பற்றி பிறகு எழுதுகிறேன்.

 இந்த வெறிச்செயலை பயன்படுத்திக் கொண்டு சங்கி கட்டுவிரியன் பாம்புகள் விஷப் பிரச்சாரத்தை துவக்கி விட்டன.   ஊடக வெறியன் அர்ணாப் கோஸ்வாமி தொடங்கி மத்யமர் ஆட்டுக்காரன் குழு சிகண்டிகள் வரை இஸ்லாமியர்கள் மீது  விஷத்தை கக்கத் தொடங்கி விட்டார்கள்.

 “மோடியிடம் நீ சொல்ல வேண்டும் என்பதற்காக உன்னை கொல்லவில்லை” என்று முதலில் ஆரம்பித்தார்கள். பிறகு ஒவ்வொருவரையும் என்ன மதம் என்று கேட்டு இந்துக்களாகக் கொன்றார்கள் என்று அடுத்த கதையை கட்டியவர்கள் இன்னும் ஆபாசமாக சென்று “உள்ளாடைகளை அவிழ்த்துப் பார்த்து விட்டு கொன்றார்கள்” என்று பரப்பி வருகின்றனர். 25 பேர் கொல்லப்பட்டதற்கு 250 பேரை கொல்ல வேண்டும் என்று பழிவாங்குவோம் என ஆங்கிலத்தில் ஹேஷ்டேக் போட்டே பிரச்சாரம் செய்கின்றனர்.

 கோத்ரா சம்பவம் ( ரயில்வே அமைச்சகம் அமைத்த பானர்ஜி கமிஷன் அது ரயில் பெட்டிக்குள்ளிருந்தே நிகழ்ந்த விபத்து  என்றும் அந்த ரயில் பெட்டிகள் நின்ற இடத்தில் வெளியிலிருந்து தாக்குதல் நடத்த வாய்ப்பில்லை என்றும் தெளிவான அறிக்கை கொடுத்ததால் அந்த விபத்தை சம்பவம் என்றே குறிப்பிடுகிறேன்) நடந்தவுடன் எப்படி குஜராத்தில் கலவரத்தை தூண்டி ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை கொன்றழித்தனரோ, அது போல இப்போதும் கலவரத்திற்கு தூண்டுகிறார்கள்.

 இந்துக்கள் மனதில் இஸ்லாமியர்கள் மீது  வன்மத்தை உருவாக்கத்தான் “இந்துக்களை மட்டும் கொன்றார்கள், உள்ளாடையை அவிழ்த்துப் பார்த்தார்கள்” ஆகிய கதைகள்.

 அது பொய்ப் பிரச்சாரம் என்பதற்கு கொல்லப்பட்டவர்களில் ஒருவர் இஸ்லாமியர், இன்னொருவர் கிறிஸ்துவர்.

 சையது அதில் உசைன் ஷா என்ற உள்ளூர்க்காரர் ஒருவர். அவர் இஸ்லாமியர்.

 நான் மேலே குறிப்பிட்டிருந்த எல்.ஐ.சி கிளை மேலாளர் திரு சுசீல் நத்தானியல் . இவர் கிறிஸ்துவர்.

 உண்மை இப்படி இருக்கையில்  சங்கிகள் செய்வது அயோக்கியத்தனமின்றி வேறில்லை.

 படு கொலை செய்த பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வதந்திகளையும் வன்மத்தையும் பரப்பும் சங்கிகளையும் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்.

 பிகு: காஷ்மீர் படுகொலை – கோட்டை விட்டார்களா வேடிக்கை பார்த்தார்களா? அடுத்த பதிவில் . . .

 

 

Tuesday, April 22, 2025

ஆட்டுத்தாடி - துட்டு தராதீங்க முதல்வரே

 


உச்ச நீதிமன்றம் தலையில் குட்டிய பின்பும் தன் கொழுப்பின் வெளிப்பாடாக ஆட்டுத்தாடி துணை வேந்தர்கள் கூட்டத்தை ஊட்டியில் நடத்துது. அதற்கு துணை வேறு வருது.

தமிழ்நாட்டு முதல்வர் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் சில உள்ளது.

அக்கூட்டத்திற்கு செல்லக் கூடாது என்று துணை வேந்தர்களுக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

அந்த கூட்ட செலவினம் என்று ஆட்டுத்தாடி பில் அனுப்பினால் அதனை ஏற்கக் கூடாது. முடிந்தால் மோடியிடம் வாங்கிக் கொள்ளட்டும். இல்லை என்றால் இது நாள் வரை வாங்கிய தண்டச் சம்பளத்திலிருந்து செலவழிக்கட்டும்.

அக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் துணை வேந்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மிக முக்கியமாக பயணப்படி, இத்யாதி எல்லாம் கொடுக்கக்கூடாது. அவர்களை பணி நீக்கம் செய்வதற்கான முதல் நடவைக்கையாக இது இருக்கட்டும்.

அப்படியெல்லாம் செய்தால் ஆட்டுத்தாடியின் ஆணவம் அடங்கும் . . .

மாற்றுத் திறனாளிகள் மீது காண்பித்த வீரத்தை (மாலையில் அது பற்றி எழுதுவேன்) ஆட்டுத்தாடி மீது காண்பியுங்கள். . .

புரட்சித்தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 



புவியை புரட்டிப் போட்ட தலைவர்,
உழைப்பாளி மக்களுக்கு அதிகாரத்தை
வென்றெடுத்துக் கொடுத்தவர்,
மன்னராட்சிக்கு முடிவு கட்டி
மார்க்சிய வழியில் அரசை உருவாக்கியவர்.
 
எல்லாரும் எல்லாமும் பெறலாம்
என்பது சாத்தியமானது.
 
வறுமை ஒழிந்தது,
நோய்மையும் ஓய்ந்தது.
மண் வளம் பெருகியது,
மனித வளமும் கூட . . .
 
கலையும் அறிவியலும்
வானளவு உயர்ந்தது,
விண்வெளியும் வசமானது.
 
அடிமைச்சங்கிலியைத் தவிர
இழப்பதற்கு ஏதுமில்லை,
வெல்வதற்கோ பொன்னுலகமே
உள்ளதென்பது உண்மையென்பதை
செயலில் காட்டி
புதியதொரு உலகைப் படைத்தவர்.
 
பிற நாடுகளின்
விடுதலை வேள்விக்கு
வேகம் கொடுத்தவர்.
 
உலகின் உண்மையான
முதல் புரட்சித் தலைவருக்கு

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Monday, April 21, 2025

தமிழ்நாட்டு சங்கிகள் டாப் டென்னில் இல்லையே?

 


இந்தியா ஹேட் லேப் (India Hate Lab) எனும் அமைப்பு இந்தியாவில் 2024ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட வெறுப்புப் பேச்சுக்களில் முதல் பத்து இடங்களை பெற்றவர்களை பட்டியலிட்டுள்ளது.


முதல் பத்து இடங்களில் பாஜகவினரே உள்ளதும் முதல் மூறு இடங்களில் மொட்டைச்சாமியார், மோடி, அமித்து ஷா ஆகியோர் பிடித்திருப்பதில் வியப்பேதும் இல்லை.

அவர்களின் தேர்தல் பிரச்சார ஆயுதமே வெறுப்புப் பேச்சுதான்.

இந்த டாப் டென் பட்டியலில் தமிழ்நாட்டு சங்கிகள் யாருமே இல்லை என்பதுதான் எனக்கு ஆச்சர்யமாக உள்ளது.

எச்.ராசா, ஆட்டுக்காரன், போலிப் பேராசிரியம் ராம.சீனு, டுபாக்கூர் எஸ்.ஜி.சூர்யா, அடிதடிக்காக நேர்ந்து விடப்பட்ட அர்ஜுன் சம்பத் ஆகியோர் ஏன் டாப் டென் பட்டியலில் வரவில்லை?

அதற்கு என்ன அர்த்தம்?

அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் இவர்களை விட மிகக் கேவலமாக பேசுவார்கள் என்பதுதான் அர்த்தம்.