Wednesday, June 7, 2023

பொய்ப்பிரச்சாரம் செய்வோருக்கு ஜெயிலே சரி

 


யாரோ ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியை கைது செய்தது போல நேற்றைக்கு மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் புலம்பிக் கொண்டிருந்தார்கள். புலம்பலின் சவுண்டே அந்தாள் மோசமானவனாகத்தான் இருப்பான் என்பதை சொல்லாமல் சொல்லியது. (பிணை கிடைத்து விட்டதாகவும் இப்போது தகவல்கள் உலாவுகிறது)

 

அந்தாள் கைது செய்யப்பட்டதற்கான காரணம் கீழே உள்ளது.



 

போட்டோஷாப் செய்து பொய்ப்பிரச்சாரம் செய்பவனை கைது செய்யாமல் கொஞ்சிக் கொண்டா  இருக்க முடியும்! அப்படிப்பட்டவர்களை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று மானங்கெட்டத்தனமான ஆலோசனைகள் சொல்லும் “எல்லோருக்கு நல்லவர்களை” கடுப்போடு கடந்து செல்ல வேண்டியிருக்கிறது என்பது  வேறு விஷயம்.

 இந்தாள் ஹிஸ்டரியில் இன்னொரு அயோக்கியத்தனமான சம்பவமும் இருக்கிறது.

 திரு ஆர்.ஷாஜஹான் அவர்களின் பதிவு கீழே.

 சரவணபிரசாத் பாலசுப்பிரமணியன் என்கிற சங்கி ஒருவரை கைது செய்து விட்டதாக சில பதிவுகளைப் பார்த்திருப்பீர்கள்.


அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அவர் யார் என்பது உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கும். பலருக்கு மறந்திருக்கும். எனவே, சிறு நினைவூட்டல்.

முஸ்லிம்கள் பிரியாணி கடை போட்டு, பிரியாணியில் மருந்து கலக்கி, இந்து ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படச் செய்கிறார்கள்... இது புரியாமல் “திம்மி” இந்துக்கள் பிரியாணி வலையில் விழுகிறார்கள் என்று பெரியதொரு கண்டுபிடிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டார் அல்லவா... அவரேதான் இவர். அந்த ட்வீட்களை காபி பேஸ்ட் செய்தால் அதுவும் பரப்பப்படும் அபாயம் இருப்பதால், டெக்ஸ்டை ஸ்கிரீன் ஷாட்டாகப் போடுகிறேன்.



இந்த மாதிரியான வதந்திகளை, பொய்ப்பிரச்சாரம் செய்து சமூக அமைதியை குலைக்கும் ஆசாமிகள் யாராக இருந்தாலும் சரி, யாருக்கு நெருக்கமாக இருந்தாலும் சரி, என்ன பதவியில் இருந்தாலும் சரி, இருந்திருந்தாலும் சரி, யுவராஜுக்கு கொடுக்கப் பட்டது போல “சாகும் வரை சிறை” தண்டனைதான் சரி.

No comments:

Post a Comment