Wednesday, June 21, 2023

கண்ணியம் உங்களுக்கு வேண்டாமா குஷ்பு மேடம்

 


தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான திருமதி குஷ்பு சுந்தர், மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்து விட்டார். அவரை ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, திமுகவிலிருந்து நிரந்தரமாக  நீக்கப்பட்டு கைதும் செய்யப்பட்டுவிட்டார்.

 சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சு தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் ராதிகா, குஷ்புவிடம் சில கேள்விகள் கேட்டிருந்தார்.


ன்புச்சகோதரி
#குஷ்பு அவர்களுக்கு,
வணக்கம்..!
நேற்று உங்கள் ஊடகப் பேட்டியை பார்த்தேன். தங்களை மிக மோசமாக விமர்சித்தத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளர் சிவாஜிமீது நடவடிக்கை எடுக்க கோரிய உங்கள் கோபம் மிக நியாயமானது.
பொதுவெளியில் இயங்கும் பெண்களை அவதூராக பேசுவதை, இழிவு படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது.
அப்படிப்பட்ட கயவர்களுக்கு சட்ட ரீதியாக அவர் சார்ந்திருக்கிற கட்சியின் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதேயே மாதர் சங்கமும் வலியுறுத்தி வருகிறது.
இன்னும் கூட ஒரு விஷயத்தை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
கற்பு குறித்து நீங்கள் தெரிவித்த ஒரு கருத்திற்காக தமிழகம் முழுவதும் சங்கிகள் குறிப்பாக பிஜேபி தலைவர் எச். ராஜா உங்கள்மீது சேற்றை வாரி இறைத்தப்போது, விஷமத்தைக் கக்கியபோது அதற்கு எதிராக முதல் எதிர்ப்புக் குரல் கொடுத்தது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்தான்.
துரதிஷ்டம் பாருங்கள்...
இப்போது அக்கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கிறீர்கள்.
ஆனால் அன்றும் இன்றும் என்றும் பெண்களை இழிவுபடுத்தும், ஆபாசமாக பேசும் எந்த ஒரு செயலையும், யார் செய்தாலும் எந்த சமரமும் இன்றி, முதல் எதிர்ப்பு குரலை கொடுப்பது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் என்பதை நாடறியும். தாங்களும் அறிவீர்.
ஆனால் உங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு உடனடியாக எதிர்வினையாற்றிய அதேவேகத்தில் உங்களிடம் சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறேன்.
சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் பயிலும் மாணவிகள் பேராசிரியர் ஹரி பத்மன் என்பவரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்ட செய்தி தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அப்போது அமைதியாகவே கடந்துப் போனீர்கள்.
டெல்லியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள்... நீங்கள் பொறுப்பு வகிக்கும் பிஜேபி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சரண்சிங் என்ற கயவனால் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகினர்.
அதற்கு நியாயம் நீதி கேட்டுத் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் பெண்கள் அமைப்புகள் அப்போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்து இருந்தபோதும், நீங்கள் இது குறித்து பேச மறுத்துவிட்டீர்கள்.
தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினர் என்ற முறையில், தாங்கள் தமிழகத்தில் முன்னெடுத்த பெண்கள் நலன் காக்கும் நடவடிக்கைகள் என்ன?
மேற்கண்ட கேள்விகளுக்கு எல்லாம் உங்களிடம் பதில் இருக்காது என்பது நன்கு தெரியும். ஏனென்றால் நீங்கள் சாந்திருக்கும் பிஜேபி எந்த காலத்திலும் நியாயத்தின் பக்கம் நிற்கும் கட்சி அல்ல.
எல்லாவற்றிலும் சுய லாபம் தேடும் பிஜேபியில் அங்கம் வகிக்கும் உங்களை போன்றோரின் நாடகபாணி அரசியலை மக்கள் நன்கு அடையாளம் கண்டு வைத்துள்ளனர் என்பதை மட்டும் இப்போதைக்குத் தங்களின் காதில் போட்டு வைக்கிறேன். நன்றி.

-#ராதிகா, கோவை...

அதற்கு திருமதி குஷ்பு சுந்தர் அவர்கள் ஆற்றிய எதிர்வினை கீழே.


Good morning. Finally, you wake up my dear sister. Was wondering how come you haven't jumped into it as yet. Let me appraise you n brush your rested mind a bit. #Kalashetra is an autonomous body. NCW cannot just jump into it. We have rules to follow. And our Chairperson of @NCWIndia was here to meet the students. But obviously, you and others are blind & deaf to that since #Khushbu was not present.

Secondly, our wrestlers have been protesting since Jan n I took charge at NCW in March, by the time it had gone to SC, after which one can not interfere with court proceedings. I expect people in CPIM to read some laws before you raise a question. But to jump in the crowd to attack me is fashionable, so I will give you leniency. Hope this helps you to learn but please make sure you educate your counterparts too about it. And did I hear you appreciating me when I spoke in support of #BilkisBano ??

Oh, sorry, all of you were in deep slumber then n react only when you think you have to be in limelight, to tag along & make some noise. Keep rattling the empty box. Good luck Sister. ♥️

திருமதி குஷ்புவின் எதிர்வினை மிகவும் அபத்தமானது, சுய நலமானது என்பதை தன் முக நூல் பதிவின் மூலம் அம்பலப்படுத்தினார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான தோழர் உ.வாசுகி. அவரின் பதிவு கீழே.  ஆங்கிலம் அறியாதவர்கள் கூட தோழர் உ.வாசுகி அவர்களின் பதிவிலிருந்து குஷ்பு என்ன எதிர்வினையாற்றினார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

தோழர் உ.வாசுகி அவர்களின் பதிவு கீழே

அன்புள்ள குஷ்புவிற்கு,

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தமிழ்நாடு மாநில குழுவின் பொதுச் செயலாளர் ராதிகாவுக்கு நீங்கள் அளித்திருந்த பதிலை நான் பார்க்க நேர்ந்தது, இது பற்றிய எனது சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு வழியாக நாங்கள் விழித்துக் கொண்டோம் என குறிப்பிட்டிருக்கிறீர்கள். நாங்கள் எப்பொழுதும் விழிப்போடும், எச்சரிக்கையோடும் தான் இருக்கிறோம் சகோதரி. பாலினப் பிரச்சினைகளில் - அவர்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளில் நாங்கள் தொடர்ந்து தலையீடு செய்வதால், விழித்துக் கொள்ளவோ அல்லது எதிலும் குதிக்கவோ அவசியமில்லை. நீங்கள் விரும்பினால், நாங்கள் உங்களுக்கு விவரங்களைத் தர முடியும். எங்கள் சிந்தனை ஓய்வெடுக்கவும் இல்லை, துருப்பிடிக்கவும் இல்லை என உறுதிபட கூறுகிறோம்.

கலாக்ஷேத்ரா பிரச்சனையில், தேசிய பெண்கள் கமிஷனின் விதிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள். தேசிய பெண்கள் கமிஷன் என்பது ஒரு சட்டப்பூர்வமான, தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகும். இதன் தலையீடு அரசு நிறுவனங்களோடு நின்றுவிடும் என்றும், தனியார் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் அதன் வரம்புக்குள் வராது என்றும் சொல்லாதீர்கள். பிறகு ஏன் தேசிய மகளிர் ஆணைய தலைவர் கலாக்ஷேத்திராவிற்கு வந்தார்? ஒரு தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக தேசிய பெண்கள் கமிஷன் உறுப்பினர்கள் கருத்து கூட தெரிவிக்க முடியாது என்று எந்த விதிமுறை குறிப்பிடுகிறது? அல்லது கலாக்ஷேத்ரா புகார்தாரர்களை பாதிக்கப்பட்டவர்களாக தேசிய மகளிர் ஆணையம் கருதவில்லையா? உண்மையில் கலாக்ஷேத்ரா மத்திய அரசால் நிதியளிக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் NCW க்கு பதிலளிக்க வேண்டியவர்கள் இல்லையா? உங்கள் வாதத்தில் தெளிவு இல்லை. ஆனால் மாதர் சங்கம், துவக்கத்திலிருந்தும், குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஜாமீன் அளிப்பதை எதிர்ப்பது வரையும் போராடும் மாணவர்களுடன் இருந்தது.

நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கோள் காட்டி மல்யுத்த வீரர்களின் போராட்டத்தின் போது தலையிடாததை நீங்கள் நியாயப்படுத்துவது நியாயமானதாகத் தெரியவில்லை. மல்யுத்த வீரர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்துவதை அல்லது கிசான் சபா மற்றும் மாதர் சங்கம் உள்ளிட்ட பிற அமைப்புகள் மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி, ஆதரவு தெரிவிப்பதை நீதிமன்ற நடவடிக்கைகள் தடுக்கவில்லையே.. அப்புறம் எப்படி உங்களை மட்டும் அமைதியாக்க முடியும்?

நாங்கள் சட்டங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். சரி, நாங்கள் அதற்குத் திறந்த மனதோடு இருக்கிறோம். ஆனால் நீங்கள் எந்த சட்டங்களை குறிப்பிடுகிறீர்கள்? தயவுசெய்து எங்களுக்கு தெளிவுபடுத்துங்கள்.

அதே சமயம், blind மற்றும் Deaf போன்ற வார்த்தைகளை இழிவான முறையில் பயன்படுத்துவது குற்றம் என்பது உங்களுக்குத் தெரியாதா? மாற்றுத்திறனாளிகளை நீங்கள் புண்படுத்துவது இது முதல் முறை அல்ல. பா.ஜ.க.வில் சேர்ந்த உடனேயே காங்கிரசை விமர்சிக்க இதுபோன்ற வார்த்தையை பயன்படுத்தியது நினைவிருக்கிறதா? அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படும் TARATDAC என்ற சங்கம், எதிர்ப்பு தெரிவித்து புகார் அளித்தது. பின்னர் நீங்கள் மன்னிப்புக் கேட்டு, இதுபோன்ற சொற்களைப் பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகளை இனி ஒருபோதும் புண்படுத்த மாட்டீர்கள் என்று உறுதியளித்தீர்கள். ஆனால் இங்கே நீங்கள் மீண்டும் அதே குற்றத்தைச் செய்துள்ளீர்கள். திரும்பத் திரும்ப செய்யப்படும் ஒரு குற்றத்திற்கு சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் படிக்க நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்.

இறுதியாக, உங்களை விமர்சிப்பது எங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் என்று ஏன் நினைக்கிறீர்கள்? இது உங்களைப் பற்றி நீங்களே கொஞ்சம் அதீதமாக மதிப்பீடு செய்வதாக தெரிகிறது. AIDWA என்பது ஒரு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தேசிய அமைப்பாகும், மிஸ்டுகால் அழைப்பு மூலம் சேர்க்கப்பட்ட உறுப்பினர் அல்ல, மேலும் அதன் ஸ்தாபகத் தலைவர்கள் சுதந்திர இயக்கத்திலிருந்து ஈர்க்கப்பட்டவர்கள். விளம்பர வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்பது பற்றி நாங்கள் ஒருபோதும் கவலைப்படுவதில்லை.

பிரச்சினைகளில் தலையிடும்போது உண்மையில் நாங்கள் ஆபத்துகள், காவல்துறை மற்றும் சமூக விரோதிகளின் தாக்குதல்களுக்கு ஆளாகிறோம். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும், நீதிமன்றங்களில் நீதியைப் பெறுவதற்கும், அவர்களுக்கு எல்லா வழிகளிலும் உதவுவதற்கும் நாங்கள் கடுமையாகப் போராடிய நூற்றுக்கணக்கான வழக்குகளை மேற்கோள் காட்ட இயலும். ஏழை பெண்கள், தலித் பெண்கள் மற்றும் பழங்குடியினப் பெண்களுக்காக நாங்கள் இருக்கிறோம். நீங்கள் அதை அறிந்திருப்பீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். நாங்கள் அடிக்கடி தாக்கப்பட்டு, அவதூறுகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். நீங்கள் விளம்பர வெளிச்சத்தைப் பற்றி பேசுகிறீர்கள்...அதுவும் AIDWA பற்றி!

உங்கள் கட்சியான பிஜேபியின் சித்தாந்தம் மனு ஸ்மிருதியை அடிப்படையாகக் கொண்டது, பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் சூத்திரர்களைப் பற்றி மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது என்பதை நாங்கள் விவரிக்க வேண்டியதில்லை. இந்துத்துவா அமைப்புகளால் சிறுபான்மையினர் எவ்வாறு குறிவைக்கப்படுகிறார்கள் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். பல வல்லுறவு மற்றும் வன்முறை வழக்குகளில், பாஜக உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குற்றவாளிகள் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே பாலின பிரச்சனைகளில் உங்கள் நிலைபாட்டை, அதேபோன்று உங்களது கட்சியின் நிலைபாட்டை மறுபரிசீலனை செய்யுங்கள்.

- உ.வாசுகி, AIDWA

தன்னை ஆபாசமாக, கண்ணியக்குறைவாக பேசியதற்காக திருமதி குஷ்பு கோபப்பட்டது, நடவடிக்கை எடுக்கச் சொன்னதெல்லாம் மிகவும் சரி, நியாயமானது. ஆனால் திருமதி குஷ்பு தன்னிடம் மற்றவர்கள் காண்பிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் கண்ணியத்தை அவர் மற்றவர்களிடம் கடைபிடிக்கிறாரா

சுந்தர்.சி அவர்களின் பணத்தை பாதுகாக்கத்தான் நீங்கள் பாஜகவில் இணைந்துள்ளீர்கள் என்று எழுதிய ஒருவருக்கு அவர் கொடுத்துள்ள பதிலை பாருங்கள்.



பாஜகவில் இணைந்துள்ளீர்கள் என்பதற்கு அடி செருப்பாலே என்று ஆரம்பித்து அவர் வீட்டுப் பெண்களை இழிவு படுத்தியுள்ளீர்களே இதுதான் நீங்கள் மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் கண்ணியமா? தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் செய்யும் செயலா இது?  வெட்கக்கேடு.

பிகு: அனைத்திய ஜனநாயக மாதர் சங்கத்தைப் பற்றி திருமதி குஷ்பு சுந்தர் ஆணவத்துடன் தெரிவித்த கருத்துக்களுக்காக தனியாக ஒரு பதிவு எழுதுவேன்.



No comments:

Post a Comment