Sunday, June 25, 2023

கூலிப்படை வைத்திருந்தால் , , ,

 


ரஷ்ய நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருந்த கூலிப்படை அரசுக்கு எதிராக திரும்பியது. 

உள்நாட்டுக் கலகம் உருவாகும், புதின் பதவி விலகி வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவார் என்றெல்லாம் ஆரூடம் சொல்லப்பட்டது.

என்ன நடந்ததென்று தெரியாது.

கூலிப்படையின் முயற்சி நின்று போனது. கூலிப்படை நிறுவனர் வெளியேறி விட்டார்.

இந்த சம்பவம் என்ன சொல்கிறது!

அரசு செய்ய வேண்டிய பாதுகாப்பு கடமையை தனியாருக்குக் கொடுத்தால் அவர்கள் அரசுக்கு எதிராகவே திரும்புவார்கள். பாதிப்பு ஆட்சியாளர்களுக்கு அல்ல, மக்களுக்கே.

கூலிப்படை கலகம் கூட யாராவது கொடுத்த பணத்தின் அடிப்படையில் கூட நிகழ்ந்திருக்கலாம்.

ரஷ்யாவைப் பார்த்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இருக்கிறது.

ராணுவத்தில் டிமோ கொண்டு வந்துள்ள ஒப்பந்த முறையான "அக்னிபாத்" திட்டத்தில் பணியிழப்பவர்களைக் கொண்டு கூலிப்படைகள் உருவாக்க முதலாளிகள் முன் வர வேண்டும் என்பது திட்டத்தின் ஒரு பகுதி. 

அப்படி கூலிப்படைகள் உருவானால் அது ஜனநாயகத்திற்கு பேரழிவு.

No comments:

Post a Comment