Monday, June 12, 2023

டுபாக்கூர் வேலைக்கு நன்றி 25 எம்.பியா?

 

சோழர் கால செங்கோல் என கதை விட்டு உம்மிடி பங்காரு செட்டி கடையில் செய்யப்பட்ட ஒரு சாதாரண பரிசுப் பொருளாக மட்டும் மதிக்கப்பட்ட அந்த தங்க முலாம் பூசப்பட்ட ஒன்றை ஜனநாயகப் படுகொலை செய்யப்பட்ட புதிய மடத்தில் வைத்ததற்கு நன்றிக்கடனாக பாஜக கூட்டணிக்கு தமிழ்நாட்டு மக்கள் 25 எம்.பி க்களை தர வேண்டுமாம். 

இது பில்லா ரங்கா கிரிமினல் ஜோடியின் இளைய ஜோடி அமித்து நேற்று வேலூரில் பேசிய பேச்சு.


யோவ் அமித்து, டோப்பா வச்ச ஏ.சி.சண்முகம் உனக்கு தரும் அந்த பொருளுக்கு எப்படி ஒரு மதிப்பும் கிடையாதோ, அது மாதிரிதான் நாடாளுமடத்தில் நீங்க வச்ச பொருளுக்கும்...

அதுக்கு நாங்க நன்றிக்கடன் காட்டனுமா?

அதுவும் 25 எம்.பி தந்து?

ரமணா படத்தை பார்த்தவங்களுக்கு மேலே உள்ள சீன் ஞாபகமிருக்கும். ஏ.சி.ஃஎப் பற்றி துப்பு தருவீங்களா என்ற கேள்விக்கு அந்தம்மாவோட எதிர்வினையும் ஞாபகம் இருக்கும்.

என்னத்தான் கிரிமினலா இருந்தாலும் மந்திரி என்பதால் அது மாதிரி இல்லாமல் கௌரதையா எழுதியிருக்கேன்.

அதனால வாயை மூடிக்கோ . . .

என்ன! இதே செங்கோல் கதையை தூக்கிட்டு இன்னொரு ஜென்மம் வேற வரும்! முடியலை . . .

No comments:

Post a Comment