Sunday, June 4, 2023

வலி(மை)யான வரிகள் . . .

 


“இந்த வழக்கு மனிதர்களின் நடத்தையின் இருண்ட பக்கத்தை வெளியில் கொண்டு வந்துள்ளது. ஜாதிய அமைப்பு முறை, மத வெறி, விளிம்பு நிலை மக்கள் மீதான மனிதத்தன்மையற்ற தாக்குதல்கள் என்று நம் சமூகத்தின் அசிங்கமான உண்மைகளின் மீது நமது கவனத்தை முன்னிறுத்துகிறது.

 

சாட்சிகளை நொடிப் பொழுதில் தடம் மாற வைப்பதன் மூலம் நம் நீதி அமைப்பை எப்படி மோசமாக கையாள முடியும் என்பதற்கான சான்று இது போன்ற வழக்குகளே”

மேலே உள்ள வலி மிகுந்த வலிமையான வரிகள், கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் யுவராஜ் எனும் ஜாதி வெறியனுக்கான சாகும் வரை சிறைத்தண்டனையை உறுதி செய்த தீர்ப்பில் சொல்லப்பட்டவை.

இதனை சமூகம் உணர்ந்துள்ளதா?
எல்லா நீதிபதிகளும் இது போன்ற நியாய உணர்வுள்ளவர்கள்தானா?

நாளை பார்ப்போம்.

No comments:

Post a Comment