Tuesday, January 3, 2017

மனித உரிமைகளும் மானம் கெட்ட போலீஸும்



சென்னையில் நடந்த அராஜகத்திற்கு  விளக்கம் கேட்டு மனித உரிமை ஆணையம் அனுப்பிய நோட்டீஸ் கீழே .


அதை படிக்கும் போதே மதுரையில் நடத்திய அராஜகம் பற்றிய செய்தி வருகிறது. 
-------------------------------------------------------------------------------------------------------
சென்னையில் தாக்கியதைப்போலவே..அதே பாணியில் மதுரையிலும் இன்று மண்டபத்தின் கதவுகளை மூடிவிட்டு மாதர்சங்க தோழர்கள் மீது காவல்துறையின் காட்டுத்தனமான தாக்குதல் சற்றுமுன் அரங்கேறியிருக்கிறது.படுகாயமடைந்த தோழர் ஈஸ்வரி கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்.

மறியலில் ஈடுபட்ட நாடகக் கலைஞன் தமிழரசன், தோழர் சாரலஸ் மீது கொடும் தாக்குதல் நடத்தி அவர்களை ஒளித்து வைத்துள்ளது  போலீஸ்!
இந்த அராஜகத்தை கண்டிப்போம்.நாளை 4 ஆம் தேதி போராட்டத்தை மிரட்டி ஒடுக்கவே இந்த திட்டம். விடக்கூடாது தோழர்களே!
                                                                                                                 கருப்பு கருணா
                                                                                                                          
---------------------------------------------------------------------------------------------------------
ஆர்ப்பாட்டம் செய்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ள 51 மாதர் சங்க மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர்சங்க தோழர்களில் தானும் ஒருத்தி என்பதாக காலை பர்வதா (Varthini Parvatha) சொன்னபோது வழமைபோல ஏதேனும் ஒரு மண்டபத்தில் தங்க வைத்து மாலை அனுப்பிவிடுவார்கள் என்றுதான் நினைத்தேன்.

இப்போது கருணாவின் ( கருப்பு கருணா) பக்கத்தை பார்த்தபோதுதான் சுரீரென்றது.

உடனே பர்வதாவைத் தொடர்பு கொண்டேன். திடீரென்று மண்டபத்தின் அனைத்துக் கதவுகளையும் சாத்திவிட்டு உள்ளே நுழைந்த ஆண் காவலர்கள் வட்டம் கட்டி அமர்ந்திருந்த தோழர்களை ரவுண்டு கட்டிக் கொண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்கள் சார்லஸ் மற்றும் தமிழை தூக்கிக் கொண்டு அவர்கள் இருவரையும் மட்டும் ரிமாண்ட் செய்வதாகவும் மற்றவர்கள் கலையலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

ஒன்று அனைவரையும் ரிமாண்ட் செய்யுமாறும் அல்லது அனைவரையும் விடுவிக்குமாறும் கோரவே கொடுரமானதும் மிக அசிங்கமானதுமான தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். அந்த இரண்டு தோழர்களும் இருக்குமிடத்தை சொல்ல மறுக்கிறார்களாம்.

தாக்குதலில் தோழர் ஈஸ்வரி மிகவும் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்திருப்பதாகவும், உரிய மருத்துவ சிகிச்சைக்கூட தரப்படவில்லை என்றும் சொல்கிறார் பர்வதா.

பர்வதா காலில் அடி பட்டிருக்கிறது.

பர்வதாவின் குரலில் இருந்த கம்பீரமும் உயிர்ப்பும் வெறுமனே வேடிக்கை பார்க்கும் என்னை ஏளனம் செய்கிறது.
                                                                                                        இரா. எ ட் வின்
______________________________________________________________________________

மோடியை பாதுகாக்க , தங்கள் டிபார்ட்மென்ட் குற்றவாளியைப் பாதுகாக்க எந்த அளவும் கீழே செல்ல காவல்துறை தயாராக உள்ளது. 

04.01,2017 ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்வீர். 

இது காவல்துறையின் கொட்டத்தை அடக்க உதவும்.

1 comment:

  1. தமிழக காட்டுமிராண்டி, லஞ்ச போலீசின் கொடுமை.

    ReplyDelete