Monday, January 30, 2017

கோட்ஸேக்களின் குமுறல்





காலம் காலமாய் நடக்கிறது
இந்த யுத்தம்.

பொய்களின் துணை கொண்டு
அராஜக வடிவங்களில்
அநீதியின் புதல்வர்கள் 
தொடுக்கும் போர்களெல்லாம் 
எப்போதுமே தோற்றுக் கொண்டுதான் 
இருக்கின்றன.

உண்மையும் நல்லிணக்கமுமாய்
காந்தி இன்னும் வாழ்வதைப் போல
கொடியவர்களின் வடிவமான
கோட்சேயும் இங்கே மடியவில்லை.                  
 
நாற்காலியைக் கைப்பற்றிவிட்டு
மக்களின் இதயத்தை இழந்தார்கள்
அழிவின் பாதையில்
அழைத்துச் செல்ல முயன்றார்கள்.
 

எத்தனை முறை முயன்றாலும்
ஆயிரம் நாடகம் போட்டாலும்
அயோக்கியர்கள் என்பதும்
அம்பலமாகிக் கொண்டே இருக்கிறது.
மண்டையை மறைத்தாலும்
அந்த நடிகர்களின் கொண்டைகள்
மட்டும் அசிங்கமாய்
தெரியத்தான் செய்கிறது.
 
உண்மையின் பிரகாசத்தில்
இருண்டு போன விழிகள்
கற்பனைக் கண் கொண்டு
காண்பதெல்லாம் மஞ்சளென்று
ஊர் முழுதும் உளறித் திரிந்தது.

ஒற்றுமையை சீர்குலைக்க
ஒழுங்கைக் கெடுக்க
தோல்வியின் புலம்பலாய்
விரக்தியின் வெறியால்
"தேச விரோதி" என
உண்மைக்கும் சத்தியத்திற்கும்
அடைமொழி அளிக்கிறார்கள்,
கோட்ஸேயின் கூட்டத்தார்.

அண்ணலின் தடி வேண்டாம்.
அமைதியின் வழி போதும்,
அநியாயங்கள் எந்நாளும்
வென்றதே கிடையாது.

காந்திக்கும் இங்கு மரணமில்லை,
மக்கள் ஒற்றுமைக்கும்தான். 

 

No comments:

Post a Comment