Tuesday, March 24, 2015

அவர் கக்கிய விஷம் இப்போது மோடி அமைச்சரின் குரலில்





மத மாற்றம் இல்லாமல் சமூக சேவை செய்ய முடியாதா என்று ஆவேசமாக கேள்வி கேட்டுள்ளார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்.

சிறுபான்மை கமிஷனின் துவக்கக் கூட்டத்தில்தான் இந்த கேள்வியைக் கேட்டுள்ளார். கேள்வி என்று அதைச் சொல்வது கூட தவறு. சமூக சேவை என்ற பெயரில் சிறுபான்மையினர் மத மாற்றம் செய்கின்றனர் என்று வெளிப்படையாக குற்றம் சுமத்தியுள்ளார்.

தங்கள் மதத்தில் உள்ளவர்கள் பெரும்பான்மை மதத்திற்கு போகக் கூடாது என்பதற்காக மற்ற நாடுகளில் சிறுபான்மை மக்கள் மத மாற்றத் தடைச்சட்டம் கோருவார்கள்.ஆனால் இந்தியாவில் அவர்கள் மத மாற்றத் தடைச் சட்டத்தை எதிர்க்கிறார்கள். “கர் வாப்சி” என்ற சொந்த மதத்திற்கு திரும்புவதை எதிர்க்கிறார்கள் என்றும் அவர் பேசியுள்ளார்.

அன்னை தெரசா சமூக சேவை என்ற பெயரில் மத மாற்றம்தான் செய்தார் என்ற ஆர்.எஸ்.எஸ் தலைமை ட்ரவுசர் மோகன் பகவத் கக்கிய அதே விஷத்தை பெயரைக் குறிப்பிடாமல் ராஜ்நாத்சிங்கும் கக்கியுள்ளார்.

சிறுபான்மை மக்களுக்கு மோடியின் அரசில் பாதுகாப்போ, நியாயமோ கிடைக்கப் போவதில்லை என்பதை ஒவ்வொரு நாளும் அமைச்சர் பெருமக்களும் காவியுடை தரித்த சாமியார்களும் உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.

இந்திய ஒற்றுமையை ஐம்பத்தாறு இஞ்ச் மார்பளவு கொண்ட தன்னால்தான் பாதுகாக்க முடியும் என்று சொன்ன மோடியின் ஆட்சியில்தான் அவராலும் அவரது கூட்டத்தாராலும்தான் இந்திய ஒற்றுமை என்பது அபாயத்திற்குள்ளாகியுள்ளது.


2 comments:

  1. This is too much. India is only place where both religious minority and linguistic minority are safer than majority Hindus.
    Even foreign citizens like Sri Lanka Tamil get all benefits like proper Indians.
    India is more peaceful under modi

    ReplyDelete
    Replies
    1. சார், எந்த உலகில் நீங்க இருக்கீங்க? கொஞ்சம் பேப்பர்லாம் படிங்க.
      அப்புறம் இந்தியாவில் மொழி சிறுபான்மையினரா?
      காவிக் கூட்டம் கூட்ட இந்த வார்த்தையை இன்னும் சொல்லலியே

      Delete