Sunday, March 29, 2015

வாழ்த்துக்கள் சாய்னா, இந்த இடம் நிலைக்கட்டும்



பேட்மிண்டன் விளையாட்டில் பெண்களுக்கான  உலகத் தர வரிசையில்  சாய்னா நேஹ்வால் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

பாராட்டுக்கள் சாய்னா, மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சதுரங்கத்தில் விஸ்வநாதன் ஆனந்த், பில்லியர்ட்ஸ் விளையாட்டில் கீத் சேத்தி, மைக்கேல் பெரைரா, பங்கஜ் அத்வானி, கேரம் போர்டில் எண்ணற்ற வீரர்கள் என்று உலகத் தர வரிசையில் முதலிடம் பெற்றுள்ளனர்,

அந்த விளையாட்டுக்களை விட கூடுதல் உடலுழைப்பை கோருகிற பேட்மிண்டன் விளையாட்டில் முதலிடம் பெற்றுள்ளது ஒரு சிறப்பம்சம். 

இந்திய விளையாட்டு ரசிகர்களே, உலகக் கோப்பை தோல்விக்கான சோகத்தை ஒதுக்கி வைத்து விட்டு இந்த மகத்தான சாதனையை கொண்டாட வாருங்கள்.

மீண்டும் வாழ்த்துக்கள் சாய்னா, உங்கள் முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும் வாழ்த்துக்கள்

 

1 comment: