Monday, March 9, 2015

மோடியின் மோசடிக்கு எதிராக இந்தியா முழுதும் ஒரே குரலில்

மோசடியான வாக்குறுதிகள் கொடுத்தவர் அவர்.

மோசடியான போட்டோஷாப் புகைப்படங்கள் மூலம் ஒரு மோசடி பிம்பத்தை உருவாக்கி மக்களை ஏமாற்றியவர் அவர்.

அவர் நடத்தும் ஆட்சி மட்டும் நேர்மையாக இருக்குமா என்ன?

மோடியின் அரசு இன்சூரன்ஸ் சட்டத்தை நிறைவேற்றியது கூட மோசடியைக் கையாண்டுதான்.

மாநிலங்களவையில் நிலுவையில் இருக்கிற இன்சூரன்ஸ் சட்ட (திருத்த) மசோதா 2008 ஐ திரும்பப் பெறாமலேயே புதிதாக இன்சூரன்ஸ் சட்ட (திருத்த) மசோதா 2015 என ஒன்றை அறிமுகம் செய்து தனது மிருக பலம் கொண்டு நிறைவேற்றியுள்ளார். அவரது 56 இஞ்ச் மார்பு நாடாளுமன்ற மரபையும் ஜனநாயகத்தையும் சீர்குலைக்க மட்டுமே  சக்தி உடையதாக உள்ளது. 

ஆனால் இவற்றை அனுமதிக்க முடியாது, மோடியின் மோசடிக்கு எதிராக இன்சூரன்ஸ்துறையில் அன்னிய மூலதன அளவை உயர்த்தாதே, பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனப் பங்குகளை விற்காதே என்ற முழக்கத்தோடு எல்.ஐ.சி யின் பொதுத்துறைத் தன்மையை எந்நாளும் பாதுகாப்போம் என்ற உறுதியோடு நாடெங்கிலும் உள்ள இன்சூரன்ஸ் ஊழியர்கள், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைமையில் எழுச்சி மிக்க ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்தியுள்ளனர். 

குமரி முதல் காஷ்மீர் வரை ஒரே குரலில் எங்கள் சங்க உறுப்பினர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டக் காட்சிகள் இங்கே.

எங்கள் வேலூர் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற வேலைநிறுத்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். 













































































1 comment:

  1. போராட்டம் வெல்லட்டும்
    நீதி நிலைக்கட்டும்

    ReplyDelete