Tuesday, March 24, 2015

வேலூர் ஆட்சியர் மீது முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு




இன்றைய ஹிந்து நாளிதழ் செய்தியின் இணைப்பை இங்கே அளித்துள்ளேன்

முன்னாள் அமைச்சர் துரை முருகன் வேலூர் மாவட்ட ஆட்சியர் நந்தகோபால் மீது  வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் சாதாரணமானவை அல்ல.

மதுபான விருந்தில் கலந்து கொண்டு அவரே கார் ஓட்டினார்.

விபத்து ஏற்படுத்தி ஒருவரின் மரணத்திற்கு காரணமானார். 

விபத்தில் சிக்கியவர்களை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அனுப்பாமல் வேறு காரிலேறி தப்பித்து விட்டார்.

இவை அனைத்துமே மிகவும் சீரியஸானவை. பல தமிழ் பத்திரிக்கைகளிலும் செய்தி வந்துள்ளது.

தலைமைச் செயலாளர் உடனடியாக தலையிட வேண்டிய பிரச்சினை இது. 

மாவட்ட ஆட்சியர் தவறு செய்திருந்தால் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்வார்களா?

இந்த அரசு செய்யுமா?
 
 

No comments:

Post a Comment