Tuesday, March 10, 2026

முட்டாள்தனமாய் அன்புமணி, ஆணவமாய் பத்ரி சேஷாத்ரி

 


அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தும் போரின் காரணமாக இரான் மட்டும் பாதிக்கப்படவில்லை, பாதிப்பு இந்தியர்களையும் எட்டிப் பார்த்து விட்டது. சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடங்கி விட்டது. 

இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது யார் பொறுப்பு?

திமுக அரசுதான் தீர்வு காண வேண்டும் ஒருவர் சொன்னால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

மத்தியரசு தீர்க்க வேண்டிய பிரச்சினையை மாநில அரசை தீர்க்கச் சொல்கிறீர்களே, முட்டாள்தனமா இல்லையா என்றுதானே கேட்பீர்களே!

ஆமாம் என்று சொல்கிறீர்களா ! அப்படியானால் மீண்டும் ராஜ்யசபாவுக்கு மட்டம் போடப்போகும் அன்புமணியிடம் கேளுங்கள், நீர் என்ன முட்டாளா என்று.


பிரெட் கிடைக்காமல் பட்டினிக் கொடுமையில் அவதிப்பட்ட பிரான்ஸ் மக்களிடம் கேக் சாப்பிடச் சொன்னார் ராணி மேரி அண்டோனியா.

நான் வெங்காயம், பூண்டு சாப்பிடாததால் அவற்றின் விலை உயர்வு பற்றி எனக்கு தெரியாது என்றார் நிர்மலா அம்மையார்.

இந்த ஆட்களுக்கு இணையாக கேஸ் இல்லையென்றால் என்ன இன்டக்சன் ஸ்டவில் சமையுங்கள் என்று பிரச்சினையை திசை திருப்புகிறார் கிழக்கு பதிப்பக சங்கி பத்ரி சேஷாத்ரி.

அமெரிக்கா, இஸ்ரேல் மீது பழி வரக்கூடாது, மோடி மீது விமர்சனம் வரக்கூடாது என்றெல்லாம் எப்படி டிசைன் டிசைனாக மடை மாற்றுகிறார்கள் பாருங்கள்.

இவர்களை எல்லாம் எக்காலத்திலும் யாரும் நம்ப முடியாது. 

No comments:

Post a Comment