மோடி நேற்று நாட்டு மக்களுக்கு சில உபதேசங்களை அருளியுள்ளார்.
அவை
"வீட்டிலிருந்து வேலை" என்பதற்கு முன்னுரிமை கொடுங்கள்
ஒரு வருட காலத்திற்கு தங்கம் வாங்குவதை தவிருங்கள்,
பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைப்பீர், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவீர்,
சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைத்திடுவீர்,
ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறைத்து இயற்கை உரங்களை நோக்கிச் செல்வீர்,
அன்னிய பிராண்டட் பொருட்களை வாங்குவதை குறைத்து சுதேசிப் பொருட்களுக்கு மாறுங்கள்.
இன்னும் ஒரு வருட காலத்திற்கு வெளிநாட்டுப் பயணத்தை தவிர்ப்பீர்.
இந்த உபதேசங்கள் எல்லாம் ஒரு கடுமையான தாக்குதலுக்கு நம்மை தயார்ப்படுத்தும் உத்தி. கொரோனா காலத்தில் செய்யப்பட்டது போல லாக் டவுன் கொண்டு வரலாம்.
பெட்ரோல், டீசல்,சமையல் எண்ணெய், ரசாயன உரங்கள் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்த்தப்படலாம்.
அன்னிய பிராண்டட் பொருட்கள் மீது கை வைக்கும் தைரியம் 56 இஞ்ச் மாவீரனுக்குக் கிடையாது என்பது நமக்கெல்லாம் நன்றாகவே தெரியும்.
இந்திய மக்களை ஒரு வருட காலத்திற்கு வெளி நாட்டுப்பயணம் மேற்கொள்ளக்கூடாது என்று சொல்லியுள்ள மோடி வரும் மே 15 அன்று ஒரு வார கால சுற்றுப் பயணம், அமீரகம், ஸ்வீடன், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு புறப்படுகிறார்.
தன்னுடைய உபதேசம் மற்றவர்களுக்குத்தான், மக்களுக்குத்தான், தனக்குக் கிடையாது என்பதில் தெளிவாக உள்ளவர் மோடி. தான் சொன்னதை தானே மீறுகிறோமே என்ற கூச்சமும் கொஞ்சமும் இல்லாதவர்.
இந்த ஐந்து மாநிலத் தேர்தல்கள் இருந்ததால் இரண்டு மாதம் கட்டுப்பாடாக இருந்தார். மேலும் அவர் இந்தியாவிலேயே இருந்தால் என்ன ஆகும்?
மேலே உள்ள படத்தை மீண்டும் பார்க்கவும்.


No comments:
Post a Comment