1989 ல் நாங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்து கொண்டோம். அப்போது பொதுத்துறை நிறுவனங்களில் மூன்று நாட்கள் வேலை நிறுத்தமும் நடைபெற்றது. வேலை நிறுத்த நாளன்று "ராஜீவ் காந்தியே ராஜினாமா செய்" என்று பாரத் பந்த் போராட்டமும் நடந்தது.
நெய்வேலியில் என்.எல்.சி. தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த பேரணி எங்கள் எல்.ஐ.சி அலுவலகம் வழியாக சென்ற போது அப்பேரணியை வாழ்த்தி முழக்கங்கள் எழுப்பினோம். சி.ஐ.டி.யு பாலு என்று அழைக்கப் பட்ட (ஆனால் அப்போது அவர் சி.ஐ.டி.யு வில் இல்லை) என்ற தோழர் எங்களுக்கு வித்தியாசமான முழக்கங்கள் எழுதித் தந்தார்.
அதில் நினைவில் இருந்த ஒரு முழக்கம்
ஓடுறார், ஓடுறார்
போன வாரம் டெல்லியில
இந்த வாரம் தண்டியில
அப்படியே ஓடிப் போய்
அரபிக்கடலில் குதிக்கட்டும்
அரபிக்கடல் நீச்சலடிச்சு
இத்தாலி போகட்டும்.
சட்டப்பேரவையிலிருந்து ஆரெஸெஸ் ரெவி ஓடிப்போனதை ஓவியர் தோழர் ரவி பாலெட் எழுதிய சித்திரத்தைப் பார்த்ததும் அந்த முழக்கத்தை மாற்ற வேண்டும் என்று தோன்றியது.
ஒடுறார். ஓடுறார்.
போன வருஷமும் ஓடினார்.
இந்த வருஷமும் ஓடினார்.
பொட்டி சட்டியை கட்டிக்கிட்டு
அப்படியே ஓடட்டும்.
பீகாருக்கு திரும்பிப் போக
இன்னும் வேகமாக ஓடட்டும்.
பிகு : டெல்லி மாரத்தான், தண்டி 60 ம் ஆண்டு ஓட்டம் என்று ராஜீவ் காந்தி சில ஓட்டங்களில் அந்த நேரத்தில் கலந்து கொண்டார்.

No comments:
Post a Comment