Wednesday, July 12, 2023

சிவ பக்தர்கள் பொங்குங்கய்யா

 


தீட்சிதர்கள் (அதிலும் குட்டி பசங்க வேற) காலில்  ஆட்டுக்காரன் விழுந்ததற்கு ஒரு சங்கி கொடுத்த  அபத்தமன முட்டு என்னவென்று  பாருங்கள்.

 


ஆட்டுக்காரன் அப்பராம், அந்த குட்டி தீட்சிதர்கள் சம்பந்தர்களாம் (திருஞான சம்பந்தர் பற்றி கட்டமைத்த கதைகள் மீது மாற்றுக் கருத்துக்கள் உள்ளது என்பதும் 3000 சமணர்களை கழுவேற்றிய கறை எத்தனை பாக்கெட் சர்ஃப் போட்டாலும் மறையாது என்பதும் வேறு விஷயம்)

 சம்பந்தர் தமிழ் பாடியவர். அவர் ஒன்றும் சமஸ்கிருதத்தில் பாடவில்லை. அப்படியென்றால் வேத சிறுவன் என்று சொல்வதன் காரணம் என்ன? ஜாதியை நேரடியாக சொல்லத் தயங்கி இப்படி சொல்கின்றார். அதாவது அந்த ஜாதியைச் சேர்ந்தவர் சிறுவனாக இருந்தாலும்  அவன் காலில் விழுவது சரிதான் என்று சொல்லி அப்பட்டமாக மனுதர்மத்தை தூக்கிப் பிடிக்கும் பதிவு இது.

 64 நாயன்மார்களில் முதன்மையான அப்பர் ரேஞ்சிற்கு ஆட்டுக்காரனையும் தற்குறி சிறுவர்களை சம்பந்தராக சொல்வதற்கும்

 உண்மையான சிவ பக்தர்களாக இருந்தால் பொங்க வேண்டும். அப்படி பொங்காத பக்தர்களும் ஆட்டுக்காரன் போல தீட்சிதர்கள் போல மோசடிப் பேர்வழிகள்தான்.

 

 

 

No comments:

Post a Comment