Monday, July 24, 2023

மணிப்பூர் பதுங்கு குழிகள்

 


 இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் படித்த மூன்று செய்திகள்…

 மணிப்பூரில் இது வரை  290 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டுள்ளன.

 காவல்துறையிடமிருந்து கைப்பற்றப்பட்ட 4000 துப்பாக்கிகளில் இதுவரை 1000 மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.

 முதலமைச்சரை விமர்சனம் செய்யும் ஒரு பதிவை முகநூலில் பகிர்ந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்ட வாலிபனை சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் ஆண்களும் பெண்களுமாக 800 பேர் கொண்ட கும்பல் வழி மறித்து அடித்து கொன்று விட்டனர்.

இந்த செய்திகள் மூலம் நான் புரிந்து கொண்டது ...

இது வரை வெளி வந்துள்ள உண்மைகள் சொற்பம். TIP OF THE ICEBERG என்று ஆங்கிலத்தில் சொல்வது போல மிகப் பெரும் பனிப்பாறையின் நுனி மட்டுமே.



மேலே உள்ள படம் மெய்தி இனப் பெண்கள் நடத்திய இயக்கம். அதிலே NRC குறித்த வாசகத்தின் அர்த்தம் தெரியவில்லை. ஆனால் அவர்கள் பாஜகவினால் தூண்டப்பட்டு வெறியேற்றப்பட்டவர்கள். அதனால் அவர்கள் எதை வலியுறுத்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. 

பாஜக ஆட்சியில் தொடர்ந்தால் மணிப்பூரில் என்றும் அமைதி திரும்பாது என்பதுதான் இப்படம் உணர்த்தும் யதார்த்தம். 

No comments:

Post a Comment