Monday, July 31, 2023

15 லட்சம் – இதற்கென்ன விளக்கம்?

 


   

ஒன்பதாண்டுகளுக்கு முன்பு தேர்தலில் வெற்றி பெற டிமோ சொன்ன ஏராளமான பொய்களில் முக்கியமான பொய் “கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் செலுத்துவேன்: என்பதுதான்.

 டிமோ ஒரு பொய்யன், மோசடிப் பேர்வழி, ஃப்ராடு பார்ட்டி என்பதற்கான சான்றுகளில் இந்த வாக்குறுதியும் ஒரு சான்று.

 15 லட்சத்துக்கு இப்போது ஆட்டுக்காரன், வானதி சீனிவாசன், குஷ்பு ஆகியோர் வினோதமான விளக்கங்களை கொடுத்து வருகின்றனர். 15 லட்ச ரூபாய் எங்கே என்று முன்பு கேட்ட ட்வீட்டை அழிக்க குஷ்பு மறந்து விட்டார் என்பது வேறு கதை.

 


“இந்தியர்கள் வெளி நாடுகளில் ஏராளமான கோடி ரூபாய் கருப்புப் பணத்தை பதுக்கி   வைத்துள்ளார்கள். அதையெல்லாம் நாம் மீட்பேன். அந்த தொகை ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய் செலுத்தும் அளவிற்கான தொகை” என்றுதான் சொன்னார். எவ்வளவு ரூபாய் கருப்புப் பணம் வெளி நாட்டில் உள்ளது என்பதை சுலபமாக புரிய வைக்கவே அப்படி சொன்னாரே தவிர வங்கிக் கணக்கில் போடுவேன் என்று இவர்கள்  முட்டு கொடுத்துளார்கள்.

 

இவர்களிடம் என் முதல் கேள்வி

 

15 லட்ச ரூபாய் வங்கிக் கணக்கில் போடுவேன் என்று சொன்னதெல்லாம் “தேர்தல் காலத்து ஜும்லா”  என்று அமித் ஷாவும்

 


தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று நம்பியதால் நிறைவேற்ற வாய்ப்பில்லாத இந்த வாக்குறுதியை அளித்தோம் என்று மந்திரி நிதின் கட்காரியும்

 

சொன்னதற்கு என்ன அர்த்தம்?

 

இரண்டாவது கேள்வி

 

வங்கியில் செலுத்துவதென்பது ஒரு புறம் இருக்கட்டும்.

 

வெளி நாடுகளில் இருந்து எத்தனை ரூபாய் கருப்புப் பணத்தை மீட்டுள்ளார்? 

 

பிகு: ரொம்ப நாள் முன்னாடி எழுதி ட்ராப்டிலேயே இருந்தது.

No comments:

Post a Comment