Thursday, July 20, 2023

குஜராத்துக்கு ஒரு குட்டு

 


குஜராத் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு போராடிய சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் மீது சி.பி.ஐ ஒரு பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளியது. உச்ச நீதி மன்றம் தலையிட்டே பிணை கொடுத்தது. 

பிணையை ரத்து செய்து அவரை மீண்டும் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் 1000 பக்க உத்தரவு போட அதனை நேற்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

"ஆயிரம் பக்கம் தீர்ப்பு படிப்பதற்கு சுவாரஸ்யமாக  இருந்தாலும் அதில் எந்த விஷயமும் இல்லை. முரண்பாடுகள் ஏராளமாக இருக்கிறது. சாட்சியங்களை போர்ஜரி செய்தார் என்று குற்றம் சுமத்துகிறீர்கள். அந்த சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்ட காலம் 2008 முதல் 2011 வரை. இத்தனை நாள் சும்மா இருந்து விட்டு 2022 ல் குற்றம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? "

என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடிந்து கொண்டுள்ளனர். குஜராத்தை குறை சொல்வதென்றால் அது டிமோவை சொல்வதாகும்.

தைரியமான நீதிபதிகள்தான்.

அதனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

நீதிபதி லோயா நினைவுக்கு வருகிறார். குஜராத் நீதிபதியை நினைக்கையில் சதாசிவம், தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகாய், எஸ்.ஏ.பொப்டே, அருண் மிஸ்ரா ஆகியோரும் நினைவுக்கு வருகிறார்கள். 

No comments:

Post a Comment