Friday, July 21, 2023

அவர்களை வீழ்த்தியேயாக வேண்டும்.

 



மணிப்பூரில் நிகழ்ந்த கொடுமை கண்டு மனம் கொதிக்கிறது. மனசாட்சி உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவரகளுக்கு கோபம் வரும்.

 ஆனால் சங்கிகள் என்ன செய்கிறார்கள்.

 கீழே உள்ள பதிவைப் போட்ட பெண்மணி, மோதல்களை உருவாக்கும் பதிவுகளை பகிர்ந்தமைக்காக ஏற்கனவே சிறைக்கு சென்றவர். கலவரம் தொடங்கிய நாள் முதல் தூங்கிக் கிடந்த டிமோவை விட்டு விட்டு உச்ச நீதிமன்ற நீதிபதியை குறை சொல்கிறார்.

 


இந்த பதிவு கட்சிகள் மாறிக்கொண்டிருக்கும் எப்போதும் கஞ்சா போதையில் திளைக்கும் நபர் போட்டது.

 


மே மாதம் நடந்த சம்பவத்தின் காணொளியை இப்போது வெளியிடுவது சதித்திட்டம் என்று சொல்கிறார் பாஜக மந்தி ரவிசங்கர் பிரசாத்.

 


இதெல்லாம் டிஸ்டாக் டூல்கிட் சதி என்று ஆணவத்துடன் பேசுகிறான் கிழக்கு பதிப்பக பத்ரி சேஷாத்ரி.

 


பெரும்பான்மை சமூகத்தை பழங்குடியின பட்டியலில் கொண்டு வர முயன்றதே பிரச்சினைக்கான அடிப்படைக் காரணம். அவர்களின் வோட்டுக்காக இதை தூண்டியது பாஜக.

 

மணிப்பூரின் மலைகளை டிமோவின் முதலாளிகளுக்கு தாரை வார்க்க வழி செய்ய வேண்டும் என்பது அடுத்த நோக்கம்,

 

உண்மை இவ்வாறிருக்க

 

போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த டிமோ எடுத்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவே பழங்குடியின மக்கள் கலவரம் செய்கிறார்கள் என்றொரு பிரச்சாரத்தை துவக்கியுள்ளார்கள்.

 

அதானியின் குஜராத் துறைமுகத்தில் பிடிபடுவதே ஆயிரக்கணக்கான கிலோ போதைப் பொருட்கள் என்றால் அங்கிருந்து பரவும் போதைப் பொருட்களின் அளவு எவ்வளவு இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.

 

இத்தோடு நிறுத்திக் கொண்டார்களா?

 

கிருஷ்ணரின் காதல் மனைவி மணிப்பூரைச் சார்ந்தவராம். அந்த பூமியில் இந்துக்கள் அவதிப்படலமா என்றொரு கேள்வியோடு மத வெறியை உசுப்பேற்றுகிறார்கள்.

 

ஒரு அயோக்கியத்தனத்தை செய்து விட்டு அதை நியாயப்படுத்திக் கொண்டு, திசை திருப்பிக் கொண்டு, பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழி சொல்கிற சங்கிகள் படு கேவலமானவர்கள்.

 

இனி இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய நாடு அழிந்தே போகும்.

 

பாஜக அரசை வீழ்த்தியேயாக வேண்டும்.

 

இது மனசாட்சியுள்ள இந்தியனின் கடமை.

 

பிகு: மேலேயுள்ள ஓவியம் ஓவியர் தோழர் ரவி பாலேட் வரைந்தது.

 

No comments:

Post a Comment