Friday, July 28, 2023

ஏன் மந்திரி இதுக்கு மட்டும்?

 



மகளிர் மசோதா பற்றிய ஒரு கேள்விக்கு “ஒரு மித்த கருத்து இல்லாமல் மகளிர் மசோதாவை நிறைவேற்ற இயலாது என்று ஒன்றிய சட்ட அமைச்சர் பதில் சொல்லியுள்ளார்.



டிமோ ஆட்சி நடத்தூம் ஒன்பதாண்டு காலத்தில் இது வரை நிறைவேறிய அனைத்து மசோதாக்களும் முழுமையான கருத்தொற்றுமையோடு நிறைவேறியுள்ளது?

 

காலையில் மக்களவை, மதியம் மாநிலங்களவை, மாலை ஜனாதிபதி ஒப்புதல் என்றுதான் நடந்துள்ளது.

 

நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்குக் கூட அனுப்ப மறுத்த அரசு இந்த அரசு.

 

அப்படி இருக்கையில் இந்த மசோதாவிற்கு மட்டும் ஒருமித்த கருத்து வேண்டும் என்று சொல்வது ஏன்?

 

வெரி சிம்பிள்.

 

மகளிர் மசோதாவை நிறைவேற்ற முடியாது என்பதை அப்படி சொல்கிறார். அவ்வளவுதான்.

No comments:

Post a Comment