Thursday, October 6, 2022

முட்டாள் மந்திரியே, அது . . . .

 


நேற்று காஷ்மீர் சென்ற மோடியின் பிரதான அடியாள் அமித்ஷா "மோடியால்தான் காஷ்மீரில் வளமும் அமைதியும் வந்தது" என அளந்து விட்டுள்ளார். 


அமித்ஷா சொல்லும் அமைதி மயான அமைதி. அவர் அளந்து விட்டதை பிரசுரித்த அதே ஆங்கில இந்து நாளிதழ், பெட்டிச் செய்தியில் அப்படி ஒன்றும் அமைதியெல்லாம் திரும்பவில்லை என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் அடைத்து விட்டு இணைய வசதியை முற்றிலுமாக துண்டித்து விட்டுதான் இந்த மனிதனால் காஷ்மீர் செல்ல முடிந்துள்ளதென்றால் இவர்கள் கதைக்கும் அமைதியின் லட்சணம் புரியும்!

பத்தாயிரம் டன் ஆப்பிளை முதலாளி அதானியின் குளிர்சாதனக் கிடங்குகளுக்கு வருமானம் வேண்டும் என்று அழுக விட்ட அயோக்கியர்கள், மோடியால் வளர்ச்சி வந்தது என்று வாய் கூசாமல் பொய் சொல்கிறார்கள்.

பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது.

பொய் சொன்னா நாக்கு அழுகிப் போயிடும்.

என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கப்பட்டு வளர்ந்துள்ளோம். சங்கி வகையறாக்களின் பெற்றோருக்கு இவையெல்லாம் தெரியாது போல. தங்கள் பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்கவில்லை. 

No comments:

Post a Comment