Friday, October 14, 2022

மோடி மாதிரியே வெறும் வாய்தான் . . .

  

எல்லாரும் வெறும் வாய்தான்.

 


செல்லா நோட்டு விவகாரத்தில் 50 நாட்களில் முன்னேற்றம் இல்லையென்றால் என்னை உயிரோடு கொளுத்துங்கள் என்றார் மோடி. ஐந்து வருடங்களாகியும் இந்தியப் பொருளாதாரம் நிமிரவே இல்லை. கறுப்புப் பணமும் மீட்கப்படவில்லை. கள்ள நோட்டுக்களும் வலம் வந்து கொண்டுதான் இருக்கிறது. மோடியும் புதிய வடைகளை சுட்டுக் கொண்டேதான் இருக்கிறார். அவரும் தன்னைத்தானே கொளுத்திக் கொள்ளும் அளவிற்கு வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை கொண்ட மனிதரும் கிடையாது.

 

வைரமுத்து மன்னிப்பு கேட்கவில்லையென்றால் தீக்குளிப்பேன் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் சோடா பாட்டில் ஜீயர் சொன்னார். அவரும் வெ.மா.ரோ.சூ.ரொ இல்லாதவராகவே வலம் வருகிறார்.

 

அதே போல சங்கிகள் அடியாளாய் மட்டும் பயன்படுத்தும் அர்ஜுன் சம்பத் கூட எதற்கோ இப்படி தீக்குளிக்கப்போவதாக சவுண்ட் விட்டார். சவுண்டோடு சரி.

 

இப்போது ஆ.ராஜா மன்னிப்பு கேட்கவில்லையென்றால் மன்னார்குடி ஜீயர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறாராம். இவரும் மொடி மாதிரி வெறும் வாய்தான்.

 

கொண்ட கொள்கைக்காக உண்ணா நோம்பிருந்து (அந்த வழிமுறையை ஏற்காவிட்டாலும்) உயிர் நீத்த சங்கரலிங்கனார், பொட்டி ஸ்ரீராமுலு, திலீபன் ஆகியோர் போல சங்கி  கபட வேடதாரிகள் கொள்கைக்காக உயிரை மாய்த்துக் கொள்வார்கள் என்றெல்லாம் யாரும் எதிர்பார்க்கக் கூடாது. சொல்லப்போனால் அவர்கள் அடுத்தவர்கள் உயிரை எடுக்கும் கொலைகாரர்கள்.

 

பிகு : இதை எழுதி 20 நாட்களுக்கு மேலாகி விட்டது. ட்ராப்டிலேயே இருந்தது. ஆனால் ஜீயர் சாகும் வரை உண்ணாவிரதமில்லை. சாதா உண்ணாவிரதம் கூட இருக்கவில்லை.

 

வாய் ம்ட்டுமே உள்ளவர்களை மட்டுமே நம்பக்கூடியவர்களாக மக்கள் இருப்பதால்தான் இது போன்ற மோசடிப் பேர்வழிகளின் பிழைப்பு நடக்கிறது.

 

No comments:

Post a Comment