Thursday, October 27, 2022

மானமிருந்தால் ஆட்டுத்தாடி. . .

 


கேரள ஆட்டுத்தாடி ஆரிப் முகமது கான் ஏற்கனவே வில்லங்கம் செய்து கொண்டிருக்கிறார். 

பல்கலைக்கழக துணை வேந்தர்கள் அனைவரையும் பதவி விலகச் சொன்னார். அவர்கள் மறுத்து விட்டனர்..

உபி மாநில பல்கலைக் கழகங்களையே  பார்த்தவர்களுக்கு கேரள பல்கலைக்கழகங்களில் நிலவும் ஜனநாயகம் புரியாது என்று சொன்ன நிதியமைச்சர் தோழர் பாலகோபால் மீது கோபம் வந்து அவர் மீது நான் மகிழ்ச்சி இழந்து ( Loss of Pleasure)  விட்டேன். அதனால் அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதல்வருக்கு கடிதம் எழுதினார்.

தோழர் பினராயி விஜயனோ " யார் அமைச்சராக இருக்க வேண்டுமென்பதெல்லாம் முதல்வரின் உரிமை. நீயெல்லாம் தலையிடக் கூடாது. இல்லாத அதிகாரத்தையெல்லாம் பயன்படுத்தக் கூடாது " என்று அரசியல் சாசன வகுப்பே எடுத்து விட்டார்.

காங்கிரஸ் கட்சி ஆட்கள் வேறு திட்டறாங்க.

மானமுள்ள மனுசனா இருந்தா  மதியாதார் தலைவாசல் மிதிக்க மாட்டேன்னு பதவியை ராஜினாமா செய்துட்டு ஓடனும். 

ஆனால் ஆரிப்புக்குத்தான் அதெல்லாம் கிடையாதே!

No comments:

Post a Comment