Monday, November 28, 2016

பணம் அல்ல, இந்த "கருப்பு" தான்



பாகிஸ்தான் மீதான துல்லியமான தாக்குதல் மூலமாக உடைந்து வரும் பிம்பத்தை ஒட்ட நினைத்த மோடி, அது கதைக்கு ஆகாததால் 1000, 500 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்து சாதாரண மக்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தினார்.

மோடியின் ஜால்ராக்களாக இருக்கிற மூடர்கள் தவிர வேறு யாரும் ஆதரிப்பதில்லை. ஜெயமோகன், எஸ்.வி.சேகர் போன்ற காமெடியன்கள் சமூக வலைத்தளங்களில் எள்ளி நகையாடப்படுகிறார்கள். இரண்டரை வருடத்தில் மோடிக்கு நிகழும் மிகப் பெரிய அசிங்கம் இதுதான். 

அதனை காவிக்களால் ஜீரணிக்க முடியவில்லை. கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்க முயலும் பாசிச சக்திகள் அல்லவா?

அவர்களின் வெறிக்கு தற்போதைய பலி தோழர் கருப்பு கருணா வின் முகநூல் கணக்கு. 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் கருப்பு கருணா, தொடர்ந்து மோடி வகையறாக்களை அம்பலப்படுத்தி வருகிறார். அவரை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை 12,000 க்கும் மேல் என்பது காவிகளின் பதட்டத்தை அதிகப் படுத்தி அந்த முகநூல் கணக்கை முடக்கி விட்டார்கள்.

கருப்புப் பணத்தை கைப்பற்றப் போவதாக கதையளந்தவர்களால் கருப்பு கருணாவின் முகநூல் கணக்கை மட்டும்தான் கைப்பற்ற முடிந்துள்ளது. 

மோடியால் இவ்வளவுதான் முடியும்.

மோடி கூட்டத்தாரின் முட்டாள்தனத்தை, அராஜகத்தை கண்டிப்போம்.
தோழர் கருணாவின் கணக்கை மீண்டும் செயல்படுத்து என குரல் கொடுப்போம்.


1 comment:

  1. ஏழைகள் குருவி போல் பல வருடங்களாக சேமித்த பணத்தை வங்கியில் கொடுத்து அதற்க்கு வரி+அபராத தொகை செலுத்த வேண்டுமென்றால் மனம் எவ்வளவு கஷ்டப்படும். எஸ்வி சேகர், வானதி சீனிவாசன், தமிழிசை போன்ற ஜால்ராவுக்கு என்ன தெரிய போகுது.

    ReplyDelete