Tuesday, November 29, 2016

இந்த கேள்வியைக் கேட்டா முடக்கம். உஷார்

 தோழர் கருப்பு கருணா அவர்களின் முக நூல் கணக்கு முடக்கத்திற்கு காரணமாக இருந்த செய்தியும் அவர் எழுப்பிய கேள்வியும் கீழே உள்ளது. 

காவிகளால் அவர்கள் செய்யும் அயோக்கியத்தனம் பற்றி யாராவது கேள்வி கேட்டால் பதில் அளிக்க முடியாமல் இப்படிப்பட்ட கீழ்த்தரமான வேலைகளில் இறங்கி விடுகிறார்கள்.

அது சரி, நாடாளுமன்றத்திற்கு வராமல் ஓடி ஒளியும் மோடிக்கு ஜால்ரா அடிப்பவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

இந்த லட்சணத்தில் ஒரு மோடி ஜால்ரா மனிதர் தோழர் பிடல் காஸ்ட்ரோ  பற்றி வேறு இங்கு வந்து பிரச்சாரம் செய்து விட்டு போகின்றார். 

அவருக்கு  காஸ்ட்ரோ பற்றியும் தெரியல. மோடி பற்றியும் தெரியலை. 

பின் குறிப்பு :

 பங்கசராகிப் போன 56 இஞ்ச் பலூன் - மாலையில்  


 இப்போது தோழர் கருணா வெளியிட்ட செய்தியையும் எழுப்பிய கேள்வியையும் படியுங்கள்.



 



பாருங்கய்யா...ரொக்கப்பரிவர்்த்தனையே வேணாம்ன்னு பிரதமரு கூவிக்கிட்டே இருக்காரு.இங்க இன்னாடான்னா...அவங்க கட்சிக்காரரே 20 லட்சத்தை ரொக்கமா பரிவர்த்தனை பண்ண கொண்டு போயிட்டிருக்காரு...

ங்கொய்யால...உபதேசம் ஊருக்குதானாலே..!

ஆமா...ஒத்த 2000 ரூவா நோட்டை வாங்குறதுக்கே இங்க அவனவன் கியூவுல நின்னு சாவுறான்...அண்ணாச்சிக்கு மட்டும் இம்புட்டு புதுநோட்டு எப்பிடி வந்துச்சி...ஒரு கியுவையே வெலைக்கி வாங்கிட்டாரோ...?

No comments:

Post a Comment