Thursday, November 3, 2016

ஜெயமோகனுக்கு இது சமர்ப்பணம்

நேற்றிலிருந்து முக நூலிலும் வாட்ஸப்பிலும் உலா வந்து கொண்டிருக்கிற ஒரு பதிவை  கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். 

இது நிஜமாக நடந்ததா என்பது எனக்கு தெரியாது. ஆனால் உடல் நலன் பாதிக்கப்பட்ட ஒரு வயதான மூதாட்டியை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு  இச்சம்பவம் ஒரு உதாரணமாக இருக்கிறது.

வார்த்தைகளில் வன்மத்தைக் கொட்டிய ஜெய மோகனுக்கு அர்ப்பணிக்கிறேன்.
 
 
கேரளாவில் நடந்த ஒரு சம்பவத்தின் மொழிபெயர்ப்பு.

போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்க விட பட்டிருந்தது. அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய் படித்தேன்.
 
அதில் " என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. யார் கைலாவது கிடைத்தால் தயவுது செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டு கொள்கிறேன். எனக்கு கண் பார்வை அவ்வளவு சரியில்லை" என்று விலாசத்துடன் எழுதியிருந்தது.

எனக்கும் பொழுது போகவில்லை, அந்த குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன். "இந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்க தான் அந்த கண் தெரியாத அம்மா இருக்கு" 

அங்கே ஓர் சிறிய கீத்து .கொட்டகை. ஒரு நாள் மழைக்கு கூட தாங்காது. வெளியில் , கண்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக வயதான ஓர் அம்மா . என் காலடி சத்தம் கேட்டதும், யாருப்பா நீ? அம்மா நான் இந்த வழியாக வந்தேன், எனக்கு 50 ரூபா கீழே விழுந்து கிடைத்தது. அது உங்களிடம் தரலாம் என்று வந்தேன். கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார். தம்பி ரெண்டு நாளா கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு பேர்  வந்து 50 ரூபா கீழே விழுந்து கிடைச்சது  என்று சொல்லி குடுத்துட்டு போறாங்க.. அந்த கடிதம் நான் எழுதவில்லை.எனக்கு எழுத படிக்க தெரியாது. பரவாயில்ல அம்மா நீங்க வச்சிக்கிங்க என்று சொல்லி கொடுத்து திரும்பினேன்.  தம்பி நீ போகும் போது மின்கம்பத்தில் இருக்கும் அந்த கடிதத்தே மறக்காமல் கிழித்து போட்டு விடு என்று அறிவுரைத்தாள் அந்த தாய். 

என் மனதில் வித விதமான எண்ணங்கள். யார் அந்த கடிதத்தை எழுதி இருப்பார். அந்த கடித்ததே கிழித்து விடு என்று அந்த அம்மா ஒவொருவரிடமும் கூறி கொண்டுதான் இருப்பார். ஆனால் யாரும் அப்படி செய்யவில்லை.  யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்கு கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனத்தால் நன்றி சொல்லி கொண்டேன். நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்க்கு ஆயிரம் வழி.

மனதில் யோசித்து கொண்டே வரும்போது வழியில் ஒருவர் என்னிடம். " அண்ணே இந்த விலாசம் எங்கே என்று சொல்ல முடியுமா? கீழே இருந்து  50 ரூபாய் கிடைத்தது. அந்த அம்மா கிட்டே குடுக்கணும். வழி சொல்றீங்களா?

மனித நேயம் சாகவில்லை.
 
 
 
பின் குறிப்பு : தான் பார்த்த முயலுக்கு மூன்று கால் என்று தொடர்ந்து தொழிற்சங்க இயக்கங்கள் மீது சேற்றை அள்ளி இறைத்துக் கொண்டிருக்கிறார் ஜெமோ. தொழிற்சங்கங்கள் பற்றிய அவரது புரிதல் அபத்தமானது, அரைகுறையானது என்று சொல்லி விட முடியாது. தொழிற்சங்க இயக்கத்திற்கு அரசியல் கூடாது என்று சொல்கிற ஆளும் வர்க்கக் குரலைத்தான் வெளிப்படுத்தியுள்ளார். 
 
சனி, ஞாயிறில் நேரம் கிடைக்கிற போது  விரிவாக எதிர்வினை ஆற்றுவேன்.
 
 

3 comments:

  1. ஆசான் பத்தி யாரு பதிவு போட்டாலும் இந்த பின்னூட்டம் அங்கு பொருந்தும். ஏற்கவனவே உங்களுடைய பதிவுகளில் இட்டதுதான், ஆனாலும் திரும்பி இதற்கும் பிரசரியுங்கள் தோழர் :-)

    ReplyDelete
  2. தான் பார்த்த முயலுக்கு மூன்று கால் என்று தொடர்ந்து தொழிற்சங்க இயக்கங்கள் மீது சேற்றை அள்ளி இறைத்துக் கொண்டிருக்கிறார் ஜெமோ. தொழிற்சங்கங்கள் பற்றிய அவரது புரிதல் அபத்தமானது, அரைகுறையானது என்று சொல்லி விட முடியாது

    correctu!

    ReplyDelete
  3. //தொழிற்சங்கங்கள் பற்றிய அவரது புரிதல் அபத்தமானது, அரைகுறையானது என்று சொல்லி விட முடியாது. தொழிற்சங்க இயக்கத்திற்கு அரசியல் கூடாது என்று சொல்கிற ஆளும் வர்க்கக் குரலைத்தான் வெளிப்படுத்தியுள்ளார். // முழுசா சொல்லனும் அனானி

    ReplyDelete