Saturday, November 19, 2016

ஆ.வி நிறைவேற்றுமா இந்த ஆசையை?

ஏற்கனவே பல முறை இப்பிரச்சினை குறித்து எழுதியுள்ளேன். அதனையே ஆனந்த விகடன் இதழுக்கும் அனுப்பியுள்ளேன். அந்த மின்னஞ்சலை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

கடந்த வியாழன் இரவு பதினோரு மணிக்கு சென்னை சென்று திரும்புகையில் வீட்டு வாசலில் சூழ்ந்து கொண்டது  தெரு நாய்கள் கூட்டம். எனது காரை ஓட்டி வந்த ஓட்டுனர் இரண்டு சக்கர வாகனம் வைத்திருந்தாலும் அதிலே போக முடியாத சூழ்நிலை. காரிலே வீட்டுக்குப் போய் விட்டு காலையில் கொண்டு வந்து விடுங்கள் என்று சொல்லி அனுப்பினேன். 

தெரு நாய்களின் மக்கட்தொகை அதிகரித்துக் கொண்டே இருப்பது பற்றியும் அதனுடைய பிரச்சினை பற்றியும் மேனகா காந்திக்கு கொஞ்சமாவது புரிதல் வேண்டும் என்றால் அவர் தன்னந்தனியாக இரவு நேரத்தில் நடந்து பார்க்க வேண்டும்.

ஆனால் இந்த ஆசை நிறைவேறாது என்ற யதார்த்தத்தையும் புரிந்தே வைத்துள்ளேன்.
 

பெறுனர்,

ஆசிரியர்,
ஆனந்த விகடன்,
சென்னை.

அன்புடையீர்,

ஆசை பகுதியை தொடர்ந்து படித்து வருகிறேன். எனக்கும் ஒரு ஆசை நீண்ட நாட்களாக உண்டு. அதனை உங்களது முயற்சிகள் வாயிலாக நிறைவேற்ற வாய்ப்புள்ளதா என்று எதிர்பார்ப்பிலேயே இக்கடிதத்தை அனுப்புகிறேன்.

தெரு நாய்கள் மீது மத்தியமைச்சர் மேனகா காந்திக்கு உள்ள பரிவும் அதன் காரணமாக அவர் எடுத்த நடவடிக்கைகளும் இன்று தெரு நாய்களின் அபரிமிதமான பெருக்கத்திற்கு உதவியுள்ளது.

தெரு நாய்கள் மீது அவருக்குள்ள பிடிப்பை தெரு நாய்கள் அறியுமா என்று எனக்கொரு சந்தேகம். அது போல தெரு நாய்கள் மக்களை எப்படி அச்சுறுத்துகின்றன என்பது திருமதி மேனகா காந்திக்கு தெரியுமா என்பதும் இன்னொரு சந்தேகம்.

ஆக இந்த ஐயங்களை போக்கும் வண்ணம், திருமதி மேனகா காந்தி அவர்களை வேலூரில் உள்ள சத்துவாச்சாரி பகுதியில் இரவு பத்து மணிக்கு மேல் நடந்து செல்லுமாறு ஏற்பாடு செய்திட வேண்டும் என்பதே என் ஆசை.

இத்துடன் உள்ள இணைப்பில் இருக்கிற முதல் படம் கடந்த வியாழன் இரவு சென்னை சென்று இரவு பதினோரு மணிக்கு வீடு திரும்புகையில் என் வீட்டு வாசலில் எடுத்த படம். 



இரண்டாவது படம் வேலூர் சத்துவாச்சாரியின் பிரதானமான வணிகப் பகுதியான ஆர்.டி.ஓ அலுவலக சாலையில் இரவு எட்டு மணிக்கு தெரு நாய்கள் மாநாடு நடத்திக் கொண்டிருந்தபோது எடுத்த படம்.


தெரு நாய்கள் பற்றி திருமதி மேனகா காந்தி அவர்கள் ஒரு நேரடி அனுபவம் பெற வேண்டும் என்ற எனது ஆசையை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

பசுக்கள் மீது பாசத்தை வெளிப்படுத்தி கோசாலைகளை ஏற்படுத்தும் இன்றைய மத்தியரசு (ராஜஸ்தானில் அதன் அவலமான நிலையின் அனுபவத்தை படித்த போதிலும்) ஏன் தெரு நாய் சாலா அல்லது அவர்களுக்கு பிரியமான மொழியில் பைரவசாலா கூட அமைக்கலாமே.

இதை நகைச்சுவையாக ஒதுக்கிட மாட்டீர்கள் என நம்புகிறேன்.

வாழ்த்துக்களுடன்,

தோழமையுள்ள
 எஸ்.ராமன்,

6 comments:

  1. அடடா, உங்க ஊரில கொஞ்சம் அதிகம் தான்

    ReplyDelete
  2. it is a big menace....we must send all dogs to her house

    ReplyDelete
  3. சென்னையிலும், எல்லா இடங்களிலும் அதிகமாக உள்ளன. அரசிடம் தெளிவான பார்வை இல்லை.

    ReplyDelete
  4. I am from Adambakkam, Chennai and am a diabetic patient too, so morning walk is inevitable. It is daily a nightmare during my morning walk as I have to come across minimum of 50 dogs from my house to the main road. Same issue in the night while I am coming from my office in my two wheeler. One pattern is that all dogs behave very virulent when they see a rider with helmet. Not sure when there will be a fix for this.

    ReplyDelete
  5. மேனகா அம்மையார் மனிதர்களுக்கு செய்கின்ற இந்த கொடுமை ஆனந்த விகடனில் வெளிவரவேண்டும் என்று விரும்புகிறேன்.

    ReplyDelete