Tuesday, November 15, 2016

இவ்வளவு அவமானம் போதுமா இந்தியர்களே!





சொன்ன எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற துப்பில்லாமல் வெற்று முழக்கம் மூலம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த மோசடிப் பேர்வழி மோடியே, உன் ஆட்சியின் தோல்விகளை மூடி மறைக்க  

கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்ற போர்வையில் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்து உழைத்து சம்பாதித்த பணத்தை மாற்றுவதற்கு நடுத்தெருவில் நிறுத்தினாய்.

இருக்கிற பிழைப்பையெல்லாம் விட்டு விட்டு கைவசம் உள்ள பணத்தை மாற்ற வேகாத வெய்யிலில் வரிசையில் நின்றவர்களை “ஊழல் பேர்வழிகள் நாலாயிரம் ரூபாய்க்காக க்யூவில் நிற்கிறார்கள்” என்று எல்லா இந்தியர்களையும் ஊழல் பேர்வழிகள் என அசிங்கம் செய்தாய்.

டாஸ்மாக்கில் கியூவில் நிற்கவில்லையா, கபாலி பார்க்க கியூவில் நிற்கவில்லையா என்று கேட்டு ஏகடியம் செய்தாய். சரக்கடிப்பதோ, சினிமா பார்ப்பதோ அவரவர் சொந்த விருப்பம். மோடியின் திமிருக்கு ஏன் நிற்க வேண்டும் என்று கேட்டால் ராணுவ வீரனோடு அபத்தமாக ஒப்பிட்டு திசை திருப்புகிறாய்.

செல்லாது என அறிவிக்கப்பட்ட பணத்திற்கு இணையான பணத்தை புழக்கத்தில் விட முடியாத கையாலாகததனத்தை மறைக்க, வீதியில் நிற்கும் ஏழை எளிய மக்களை கூலிக்கு மாரடிப்பவர்கள் என்று இழிவுபடுத்தி அடையாள மை வைக்கப் போவதாய் அவமானப் படுத்துகிறாய்.

காலம் காலமாக சேமித்து வைத்த பணத்தை மாற்ற பிழைப்பை விட்டு விட்டு பொறுமையோடு வரிசையில் நிற்பவர்களை, திமிரோடு நீ இதுவும் பேசுவாய், இன்னமும் பேசுவாய்.

கருப்புப் பண திமிங்கலங்களை பிடிக்க யோக்கியதையற்று அத்தனை பேரையும் அலைய வைத்து விட்டு அவர்களையே குற்றம் சொல்லும் ஆணவப் பிறவியை இதுவரை உலகம் கண்டதில்லை. ஹிட்லரோடு உன்னை ஒப்பிடுவார்கள். ஹிட்லரையும் நல்லவனாக்குபவன் நீ. 

இத்தனை அயோக்கியத்தனம் செய்யும் போதே, உனக்கு ஜால்ரா அடிக்கும் அதி மேதாவிகள் இருக்கிற வரை ஆட்டம் போடலாம் என்று நினைக்காதே. இன்னும் இரண்டரை ஆண்டு காலத்திற்குப் பிறகு மீண்டும் விரல்களில் மை வைக்கும் காலம் வரும். இன்று வைக்கும் மையை கண்டிப்பாக உன் முகத்தில் பூசுவார்கள்.

தன் நாட்டு மக்களை மோடி அளவிற்கு எந்த ஒரு ஆட்சியாளரும் அவமானப்படுத்தியதில்லை. இந்திய மக்களே, போதுமா இந்த அவமானம்? இனியும் பொறுப்பது தகுமோ? 
 

4 comments:

  1. உங்களுக்கு தேசபக்தி பொங்கி வழிய வேண்டுமென்றால் நீங்கள் படிக்கவேண்டிய ஒரே இதழ் தினமலர் மட்டுமே.ஒட்டுமொத்த தேசபக்தியும் அவர்களிடம் மட்டுமே உள்ளது.

    ReplyDelete
  2. Yes, he is showing his true face now... really dangerous...wiping all the people's saving

    ReplyDelete
  3. Have you ever bought a house? How did you pay? Did you have to bribe anyone?

    ReplyDelete
    Replies
    1. இந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியும். ஆனால் முகத்தை மூடிக் கொண்டுள்ள கோழைகளிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பின்னூட்டம் போடவே திருட்டுத்தனமாக ஒளிந்து வருகிற நீங்கள் எவ்வளவு கருப்புப் பணத்தை ஒளித்து வைத்துள்ளீர்கள் என்று கேட்டால் பதில் சொல்வீர்களா?

      Delete