Friday, September 9, 2016

பாமக வின் யோக்கியதை இதுதான்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி அவர்களின் முக நூல் பதிவு இது. பாமக வின் யோக்கியதையை இப்பதிவு அம்பலப்படுத்துகிறது. 

 


அங்குசெட்டிபாளையத்தில் ஒரு பள்ளி சிறுமி, பள்ளியில் நடக்கும் சாதிய பாகுபாட்டை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறார். சாதிய பாகுபாடு அரசியல் சட்டத்தால் தடுக்கப்பட்டிருக்கும் குற்றம். முகநூல் பதிவுகள் பல, அந்த சிறுமியையும், தலித் பெண்களையும் மிக ஆபாசமாக சித்தரித்து வெளியிடப் பட்டுள்ளன. 

குற்றத்தை ஆதரிப்பது குற்றம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு பொதுவெளியில் நாகரீகமாக விவாதம் கூட செய்யத் தெரியாமல் சமூகம் தாழ்ந்து கொண்டிருக்கிறதே! தமிழகம் முன்னேறியது இவ்வளவு தானா? ஒரு பெண்ணை விமர்சிக்க வேண்டுமானால் உடனே ஆபாசத்தை அள்ளித் தெளிக்கும் புத்தி எங்கிருந்து வருகிறது? பெண்களின் பாதுகாப்பு பற்றி பாமக பேசுவது உண்மையான அக்கறையினால் அல்ல, சாதி பெருமிதத்தைத் தூக்கி நிறுத்தத் தான் என்று சொன்னால் சிலருக்கு கோபம் வருகிறது. 

அவர்கள் எண்ணிப் பார்க்கட்டும். உன் மனைவியை நான் கலப்பு திருமணம் செய்து கொள்கிறேன் என்பதும், சிறுமியை பாலியல் பண்டமாக வர்ணிப்பதும் சொல்பவர்களின் தரத்தைக் காட்டுகிறது. இதை எதிர்க்கவில்லை என்றால் நமது தரமும் இறங்கி வருகிறது என்று தான் அர்த்தம்.

பின் குறிப்பு : அனாமதேயங்கள் ஏராளமாக வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். பாமக வின் அருள் ஒரு பதிவில் அவசியமே இல்லாமல் மாதர் சங்கத்தை வம்புக்கிழுத்து இருந்தார். அதற்கு நான் போட்ட பின்னூட்டத்தை  வெளியிடக்கூட அவர் தயாராக இல்லை. அதுதான் அவர்கள்.
 

2 comments:

  1. Tamilmanathil puramboku nu oru section aarambichi athula arul, Lakshmi beefpathi, kizhavimainthan maathiri allakai bloggers'a inaichi vidanum.

    ReplyDelete
  2. பெண்களின் பாதுகாப்பு பற்றி பாமக பேசுவது உண்மையான அக்கறையினால் அல்ல சாதி பெருமிதத்தைத் தூக்கி நிறுத்தத் தான்.
    முற்றிலும் உண்மை.
    பொதுவாக தமிழகத்திலேயே பெண்களை இழிவுபடுத்தும் புத்தி தராரளமாகவே உலாவருகின்றது.

    ReplyDelete